ஆப்நகரம்

நான் ரொம்ப நல்லவன்டா எழில்..! சமாளிக்க முயற்சிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

கோபி எழிலிடம் தான் ரொம்ப நல்லவன் என்பது போல பேசி பிரச்னையை சமாளிக்க பார்க்கிறார்.

Samayam Tamil 26 Apr 2021, 11:28 pm
பாக்கியலட்சுமி சீரியலில் சென்ற வாரம் முழுவதும் பெரிய பிரச்சனையாக தான் ஓடிக்கொண்டிருந்தது. பாக்யா இனி மசாலா செய்யவே கூடாது என ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன கோபி, எழிலுக்கு அனைத்து உண்மையும் தெரியவந்து அவர் கோபியை மிரட்டி மசாலா கம்பெனியை தொடர்ந்து நடத்த அனுமதி கொடுக்க வைத்தது வரை பரபரப்பாகவே ஓடியது.
Samayam Tamil baakiyalakshmi serial review gopi tries to talk to ezhil
நான் ரொம்ப நல்லவன்டா எழில்..! சமாளிக்க முயற்சிக்கும் கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று


அண்ணன் செழியனை சீண்டும் எழில்

ராதிகா போன் செய்தாலும் அதை எடுக்காமல் தவிர்க்கிறார் எழில். கால் எடுக்கும்படி ராதிகா மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால் கோபி ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுகிறார்.

அதன் பின் மறுநாள் காலையில் எழில் கிச்சனில் கொண்டிருக்கிறார். அப்போது செழியனும் வருகிறார். அவரை சீண்டும் வகையில் செழியன் பேசுகிறார். உனக்கு என்ன எதையும் கண்டு கொள்வதில்லை. வேலை, ஒர்க்கவுட், தூக்கம் என இருக்க என சொல்கிறார்.

பாக்யா உனக்கு சூடு சொரணையே இல்லை..

அந்த நேரம் பார்த்து வேலைக்காரியும் வருகிறார். அவர் தான் வேலைக்கு புது வீடுகளை பார்த்துக்கொண்டிருப்பதாக கூறுகிறார். கோபி மசாலா செய்யலாம் என சொல்லிவிட்டது அவருக்கு தெரியாது தானே.. அதனால் பாக்யா சிரித்துவிட்டு அதன் பிறகு விஷயத்தை சொல்கிறார்.

இதை கேட்டுவிட்டு 'உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்லை அக்கா. நேற்று வரை அப்படி திட்டினாரு, தற்போது அவர் ஓகே சொல்லிட்டாரு என வெட்கமே இல்லாமல் சிரிச்சிட்டு சொல்ற என கூறுகிறார்.

படம் பூஜை போடவுள்ள எழில்

அதன் பிறகு எழில் வந்து அனைவரிடமும் மகிழ்ச்சியான ஒரு செய்தியை கூறுகிறார். தான் இயக்கவுள்ள படத்தின் பூஜை நாளை போட இருப்பதாக கூறுகிறார். அதற்கு பிறகு படத்தின் பணிகளை தொடங்கிவிடுவேன் என கூறுகிறார். அதை கேட்டு அனைவரும் அவரை பாராட்டுகின்றனர்.

இதை அப்பாவிடமும் சொல் என அனைவரும் எழிலை கட்டாயப்படுத்துகின்றனர், ஆனால் அவர் சொல்ல முடியாது என கூறுகிறார். அதன் பின் கோபி வந்ததும் மற்றவர்கள் இது பற்றி அவரிடம் சொல்கிறார்கள். அவரும் எழிலை பாராட்டுகிறார். ஆனால் எழில் கண்டுகொள்வதிலை.

நான் நல்லவன்டா..

தனது கார் ரிப்பேர் என சொல்லி எழிலை பைக்கில் கொண்டு சென்று விடும்படி கூட்டி செல்கிறார் கோபி. பாதி வழியில் நிறுத்தி அவரிடம் கோபி பேசுகிறார்.

யாரோ சொன்னதை கேட்டு என்னை பற்றி தவறாக எண்ணிவிடாதே. நான் நல்லவன் டா.. ஒரே வீட்டில் இருந்துகொண்டு இப்படி இருப்பது நன்றாக இல்லை என பேசுகிறார் கோபி.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி