ஆப்நகரம்

Vijay Tv: யாருக்கும் தெரியாமல் 'பாக்கியலட்சுமி' அமிர்தா செய்த காரியம்: என்ன சிம்ரன் இதெல்லாம்..?

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 16 Feb 2023, 7:39 pm
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் சமீப நாட்களாக எழிலின் கல்யாணம் தொடர்பான பிரச்சனைகள் ஒளிப்பரப்பாகி வந்தன. இதில் எழில் யாரை கல்யாணம் செய்து கொள்வார் என்ற ட்விஸ்ட் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


எழில் வீட்டுக்கு வெளியில் இருந்த கோபியின் பெயரை தூக்கி எறிந்து விட்டு பாக்யாவின் பெயரை வைத்ததால் கோபி ஆத்திரமடைந்தார். இதனால் இந்த வீட்டை நான் விற்க போகிறேன் என்று கூற, அதை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று எழில் சபதம் போடுகிறான். வீட்டுக்கான மொத்த பணத்தையும் ஒரே மாதத்தில் கொடுக்க வேண்டும் என கெடு கொடுக்கிறான் கோபி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எழிலால் எவ்வளவோ அலைந்தும் ஒரு மாதத்திற்குள் பணம் புரட்ட முடியாததால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறான். மற்றொரு பக்கம் படத்தை பாதியில் நிப்பாட்டிய வர்ஷினியின் அப்பா, தனது மகளை கல்யாணம் செய்து கொண்டால் பணத்தை தருவதாக மிரட்டுகிறான். வர்ஷினியும் இந்த நிலைமையை பயன்படுத்தி எழிலை கல்யாணம் செய்ய திட்டமிடுகிறாள்.

கடைசியில் எழில் பாட்டியின் வற்புறுத்துதல் மற்றும் மிரட்டுதலால் வர்ஷினியை திருமணம் செய்ய சம்மதித்திக்கிறான். கடைசியாக எழிலுக்கும், வர்ஷினிக்கும் திருமண செற்பாடு நடக்கிறது. ஆனால் பிடிக்காதவரை கல்யாணம் செய்து தான் கஷ்டப்பட்டதை போல், ஒருநாளும் தனது மகனும் கஷ்டப்படக்கூடாது என முடிவு செய்து திருமணத்தை தடுத்து நிறுத்துகிறாள்.

Raja Rani 2: இனி நான் சந்தியா இல்லை: குண்டை தூக்கிப்போட்ட 'ராஜா ராணி 2' ரியா.!

கடைசியில் எழில் ஆசைப்பட்டதை போன்று அமிர்தாவோடு கல்யாணம் செய்து வைக்கிறாள் பாக்யா. பலவித எதிர்ப்புகளையும் மீறி இந்த கல்யாணம் நடந்து முடிகிறது. இந்நிலையில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் திருமண நேரத்தில் எழில் தனக்கு தாலி கட்டவில்லை. தனக்குத்தானே தாலி கட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளார் ரித்திகா.

Baakiyalakshmi Serial: இது எனக்கும் கோபிக்குமான யுத்தம்: அதிரடியாக சவால் விட்ட பாக்யா.!

மேலும் இதற்கு அமிர்தாவுக்கு இப்படித்தான் திருமணம் முடிந்தது என்று கேப்ஷன் ஒன்றையு கொடுத்துள்ளார் ரித்திகா. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். சீரியலில் இப்படித்தான் கல்யாணம் ஆகுமா என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும், இதுக்கு பேர்தான் செல்ப் லவ்வா? இதெல்லாம் என்ன சிம்ரன் என கலாய்த்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி