ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபியை அசிங்கப்படுத்திய ராதிகா.. எழிலுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 28 May 2022, 9:34 am
ராதிகா தன்னை வெளியில் போக சொன்னதும், உன்னையே உலகம்ன்னு சுத்தி சுத்தி வந்தேனே எனக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். கண்டிப்பா போயிடுவேன், திரும்ப வரவே மாட்டேன் என கோபி சொல்ல ராதிகா போங்க என கூறி விடுகிறாள். அங்கிருந்து வெளியே வந்தபோது வெளியிலிருந்து மீண்டும் ராதிகாவை பார்த்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய சட்டென கதவை சாத்தி விடுகிறாள் ராதிகா.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


கோபி மூர்த்தி மீது பயங்கர கோபத்துடன் காரில் புலம்பி கொண்டே வருகிறான். உண்மை தெரிஞ்சா நீ என்னை விட்டு போயிடுவா. அது நடக்கக்கூடாதுன்னு தான் இவ்வளவு மெனக்கெடுறேன் என பேசி கொண்டே வருகிறான். இந்தப்பக்கம் எழில் வீட்டிற்கு வந்து இன்னும் பத்து நாள்ல தன்னுடைய படம் ரிலீஸ் ஆக போவதாக கூறுகிறான். அவன் சொல்வதை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அவனுக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது ஈஸ்வரி எழிலுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடலாம் என சொல்ல, பாக்யா அதெல்லாம் வேண்டாம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும். அவன் இன்னும் 2 படம் பார்க்கட்டும் என சொல்கிறான். ஈஸ்வரி அவனா ஒரு பொண்ணு பாத்து கூட்டிட்டு வரதுக்குள்ள நாமலே பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்கிறாள். எழிலும் இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என கூறுகிறான்.

இந்தப் பக்கம் கோபி தன்னுடைய நண்பர் சதீஷை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறான். ராதிகா தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது பற்றி சொல்லி வருத்தப்படுகிறான். ராதிகா எனக்கு வேண்டும் பாக்கியா ஏதோ பொம்பளைங்கள கூட சேர்ந்துட்டு சமையல் செஞ்சு பிழைச்சிப்பா. என் அப்பா அம்மாவுக்கு ஒரு நல்ல பையனா இருந்திருக்கேன். என் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருந்து கடமையை செய்து இருக்கிறேன் என கூறுகிறான்.

Bharathi Kannamma: வெண்பா செய்த மட்டகரமான காரியம்.. தெறித்து ஓடிய மாப்பிள்ளை.!

ராதிகா கூட இருக்கிற இந்த கொஞ்ச நாளா தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு ராதிகா கண்டிப்பா வேணும்‌. அதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறேன் என கண்கலங்கி பேசுகிறான் இந்தப் பக்கம் கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் ராதிகா அப்செட்டில் அமர்ந்துக் கொண்டிருக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி