ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கருவில் கலைந்த குழந்தை.. கவலையில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 15 Oct 2021, 4:49 pm
செழியனுடன் சண்டை போட்டு படுத்திருக்கும் ஜெனி, தூக்கத்தில் இருந்து எழுந்து போய் பாத்ரூம் போகும் போது ஒரே இரத்தமா போச்சு என சொல்லி அழுகிறாள். அவள் சொல்வதை கேட்டு அதிர்ச்சியடையும் குடும்பத்தினர் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஜெனியை பரிசோதித்து விட்டு வெளியில் நிற்பவர்களை உள்ளே அழைத்து பேசுகிறார் டாக்டர். அவர்களிடம் கரு களைந்து விட்டதாக சொல்கிறார்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


டாக்டர் சொல்வதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். ஈஸ்வரி, எங்க குடும்பத்தோட முதல் பேர குழந்தை. எவ்வளவு ஆசையா இருந்தேன் என அழுது கொண்டே வெளியே சென்றுவிடுகிறாள். பாக்யா, ஜெனிக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என விசாரிக்கிறாள். அவளுக்கு மயக்கம் தெளிந்ததும் கூட்டி கொண்டு செல்லலாம் என சொல்ல்கிறார் டாக்டர். இதை எப்படி போய் வீட்ல எல்லார்கிட்டயும் சொல்றது என அழுகிறாள் ஈஸ்வரி.

அவளை பாக்யா சமாதானம் செய்கிறாள். அதன்பின்னர் ஜெனி எழுந்ததும் அவளை போய் அனைவரும் பார்க்கின்றனர். அவர்களிடம் அழுது கொண்டே பாப்பா இல்லையா? என கேட்கிறாள். அவளை பாக்யா சமாதானம் செய்கிறாள். அவள் போன பிறகு செழியன் கை பிடித்து பேச வரும்போது, ஜெனி அவள் கையை தட்டிவிட்டு திரும்பி கொள்கிறாள்.

கடை யார் பேர்ல இருக்கு?: மீனா கேட்கும் கேள்வியால் அதிர்ச்சியடையும் குடும்பத்தினர்!

இதனிடையில் வீட்டிற்கு வந்ததும் இனியா குழந்தை களைந்த விஷயம் கேள்விப்பட்டு அழுகிறாள். அவளை பாக்யாவும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து சமாதானம் செய்கின்றனர். ஏற்கனவே ஜெனி குழந்தை போனது நினைச்சு அழுதுட்டு இருப்பா. இதுல நம்மலும் வருத்தப்பட்டுட்டு இருந்தா, அவள் ரொம்ப கஷ்டப்படுவா என சொல்லி சமாதானம் சொல்கின்றனர்.

அதன்பின்னர் எழில், கோபி வந்து ஜெனிக்கு ஆறுதல் சொல்கிறான். செழியன் அவன் அப்பாவை கட்டிபிடித்து அழுகிறான். இதை நினைச்சு பீல் பண்ணாதீங்க ரெண்டு பேரும். முதல்ல கெல்த்தை பாருங்க. அதான் முக்கியம் என சொல்கிறான் கோபி. அனைவரும் சென்ற பிறகு செழியன், ஜெனியிடம் பேச வரும்போது அவள் முகத்தை திருப்பி கொள்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி