ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபியை தன்னுடைய அப்பா என சொல்வதை கேட்டு அதிர்ச்சியடையும் மயூ!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 25 Oct 2021, 5:54 pm
பாக்யா கோபியிடம் ஜெனியை பார்க்க நம்ம அவுங்க வீட்டுக்கு போவோம் என சொல்கிறாள். அவனும் நாளைக்கு சாயங்கலாம் போகலாம் என அவளிடம் சொல்கிறான். இதனிடையில் கோபிக்கு போன் பண்ணும் ராதிகா, நாளைக்கு ஈவ்னிங் கார் எடுக்க போக வேண்டும் என சொல்கிறாள். அவள் சொல்வதை கேட்டுவிட்டு பாக்யாவிடம் நாளை மறுநாள் நம்ம ஜெனி வீட்டுக்கு போவோம் என பாக்யாவிடம் சொல்கிறான்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அதனை தொடர்ந்து மறுநாள் கார் எடுக்க செல்கின்றனர். அங்கு மயூவிடம் ஆபிஸில் உள்ளவர்கள் கோபியை அவளுடைய அப்பா என்றும் பேமிலயாய் சேர்ந்து போட்டோ எடுத்து கொள்ளுங்கள் என சொல்வதை பார்த்தும் அதிர்ச்சியடைகிறாள். இதனிடையில் தனக்கு சாப்பாடு கொடுக்க வரும் பாக்யாவிடம் கோபப்படுகிறான் செழியன். அவனிடம் ஜெனியை பற்றி பேசி புரிய வைக்க முயற்சிக்கிறாள் பாக்யா. ஆனால் அவன் அதனை புரிந்து கொள்ளாமல் கோபப்படுகிறான்.

அதன்பின்னர் கஸ்தூரியிடம் வந்து செழியன் பற்றி வருத்தத்துடன் பேசுகிறாள் பாக்யா. இதனிடையில் கார் வாங்கிவிட்டு வீடு வந்து சேருகின்றனர் கோபி, ராதிகா, மயூ மூவரும். ஈவ்னிங் தான் வந்து அவர்களை கோவிலுக்கு அழைத்து செல்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறான். இதனிடையில் மயூ, ராதிகாவிடம் கார் வாங்க போன இடத்தில் கோபியை தன்னுடைய அப்பா என அங்குள்ளவர்கள் சொன்னது பற்றி கேட்கிறாள்.

தனம் குழந்தையை ஒளிந்து நின்று பார்க்கும் கண்ணன்: பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று!

அப்போது ராதிகா, அங்க இருக்குறவங்களுக்கு நம்ம யாருன்னு தெரியாதுல. அதுனால அப்படி சொல்லி இருப்பாங்க என கூறி சமாதானம் செய்கிறாள். இதனை ராதிகா கோபியிடம் சொல்லும் போது, மயூ என்னை மத்தவங்க கிட்ட அப்பான்னு சொன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் என சொல்கிறான். அதனை கேட்டு அவள் அதிர்ச்சியடையவும், நிஜமாவே எனக்கு மயூவை அவ்வளவு பிடிக்கும் என சொல்கிறாள்.

அதனை தொடர்ந்து அவர்களை சாயந்தரம் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு கிளம்புகிறான் கோபி. இதனிடையில் ஈஸ்வரி கோவிலுக்கு வராததால் பாக்யாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு கிளம்புகிறான் சத்தியமூர்த்தி. மற்றொரு பக்கம் மயூ மற்றும் ராதிகாவுடன் புது காரில் கோவிலுக்கு வருகிறான் கோபி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி