ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: தடபுடலாக நடக்கும் எழில் கல்யாண ஏற்பாடு: சென்னைக்கு கிளம்பிய அமிர்தா.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் எழிலை பார்ப்பதற்காக குழந்தையை அழைத்து கொண்டு சென்னைக்கு கிளம்புகிறாள் அமிர்தா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 2 Feb 2023, 10:02 am
எழிலுடன் குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வருகின்றனர். எழில் மட்டும் எதையோ பறி கொடுத்ததை போன்றே இருக்கிறான். அவன் வந்ததும் வர்ஷினி அப்பா கட்டிப்பிடித்து வரவேற்கிறார். பாக்யாவும் சோகமாகவே இருக்கிறாள். வர்ஷினியின் அப்பா அனைவரும் தங்க ரூம் ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக சொல்லி அனுப்பி வைக்கிறார்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


செழியன் எழிலை அழைத்து கொண்டு மேக்கப் போட செல்கிறான். பாக்யா எழிலுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதமா இல்லையா என்பது தெரியாமல் குழப்பத்திலே இருக்கிறாள். இந்தப்பக்கம் அமிர்தா, எழில் வந்து பேசிவிட்டு சென்றதையே நினைத்து யோசித்து கொண்டிருக்கிறாள். அவனுக்கு போன் போட, அவன் எடுக்காமல் இருக்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

உடனே சதிஷுக்கும் போன் போட அவனும் எடுக்காததால் அமிர்தா பதருகிறாள். இதனிடையில் எழில் பிடிக்காத கல்யாணத்துக்கு தயார் ஆகி கொண்டிருக்கிறான். அவன் ரூமிற்கு பாக்யா போக, அவன் ஒரு மாதிரியாக இருப்பதை கவனிக்கிறாள். என்ன ஆச்சு என கண்ணாலே கேட்க, அவன் ஒண்ணுமில்லை என தலையை ஆட்டுகிறான்.

அவர்கள் பேசி கொள்வதை கவனிக்கு ஈஸ்வரி, உடனே எழில் கிளம்பட்டும் என சொல்லி பாக்யாவை வெளியில் அழைத்து செல்கிறாள். மறுபடியும் அவள் உள்ளே போக முயற்சிக்கும் போது, நீ போய் இல்லாததையும் பொல்லாததையும் பேசி அவன் மனசை கெடுக்காத என திட்டி கையோடு அழைத்து செல்கிறாள். அதன்பின்னர் ஜெனி, செல்வியிடம் எழிலுக்கு இந்த கல்யாணத்துல நிஜமாவே சம்மதமா தெரியலை என சோகமாக பேசுகிறாள்.

Bharathi Kannamma: விடிந்தால் நிச்சயதார்த்தம்: நடு இரவில் காணமல் போன பாரதி.!

இந்தப்பக்கம் அமிர்தா சென்னைக்கு கிளம்ப முடிவு செய்து அப்பா அம்மாவிடம் சொல்கிறாள். எழில் வந்து பார்த்துவிட்டு போனதையும், அவன் அழுதது பற்றியும் சொல்கிறாள். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். அமிர்தா கையெடுத்து கும்பிட்டு அவர்களிடம் சம்மதம் வாங்குகிறாள். குழந்தையை தூக்கிக் கொண்டு சென்னைக்கு கிளம்பி வருகிறாள்.

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய பாரதி: கண்ணம்மா சொன்ன விஷயம்.!

இதனிடையில் கோபி ராதிகா மயூரா மற்றும் இனியா உடன் மண்டபத்துக்கு வந்து இறங்குகிறான். செழியன் அவர்களை வரவேற்று வர்ஷினியின் அப்பாவிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். கோபியை பார்த்து ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி