ஆப்நகரம்

Baakiyalakshmi எழிலுடன் சுற்றும் அமிர்தா.. பார்த்துவிடும் அப்பாவால் புது சிக்கல்!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எழில் அமிர்தாவை நேரில் சந்தித்து பேசுகிறார். அதை அவரது அப்பா பார்த்துவிடுகிறார்.

Samayam Tamil 27 Apr 2021, 4:29 pm
எழில் எச்சரித்தபிறகு கோபியிடம் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. தான் தவறு எதுவும் செய்யவில்லை என கோபி எழிலிடம் தனியாக பேசும்போது சொல்கிறார்.
Samayam Tamil baakiyalakshmi serial update amirthas father shocked on seeing her with ezhil
Baakiyalakshmi எழிலுடன் சுற்றும் அமிர்தா.. பார்த்துவிடும் அப்பாவால் புது சிக்கல்!


இவருக்கு ஆஸ்கார் அவார்டே கிடைக்கும்

கோபியை அழைத்துக்கொண்டு எழில் பைக்கில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது பாதியில் நிறுத்திவிட்டு இருவரும் பேசுகின்றனர். நான் நல்லவன் என எழிலிடம் அவர் கூறுகிறார்.

நீ போட்டியில் ஜெயித்தபிறகு உனக்கு பைக் வாங்கி கொடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் நீயும் உன் அம்மாவும் சேர்ந்து வாங்கிக்கொண்டீர்கள் என சொல்கிறார். இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எழில், 'என்னமா நடிக்கிறாரு, படத்தில் நடிச்சா ஆஸ்கர் அவார்டே கிடைக்கும் என நினைத்துக் கொள்கிறார்.

மன்னிப்பு கேட்கும் மாமனார்

பாக்யா தனது மசாலா நிறுவனத்தை மீண்டும் தொடங்கி வேலையை வேகமாக செய்து கொண்டிருக்கிறார். கான்வென்டுக்கு மசாலா கொடுக்கவேண்டும் என்பதால் அவர் மசாலா அரைத்துக்கொண்டிருக்கும்போது மாமனார் அங்கே வருகிறார். 'இவரை நம்பவே கூடாது, மசாலா செய்ய வேண்டாம் என சொன்னதும் அவருக்குத்தான் சப்போர்ட் செய்தார்' என வேலைக்காரி சொல்கிறார்.

அதற்காக மன்னிப்பு கேட்கும் மாமனார் அதற்கு பிராயச்சித்தமாக இங்கே வேலை செய்யப்போவதாக சொல்கிறார்.

சந்தோஷிடம் பேசும் இனியா

பள்ளியில் இது வரை சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்து வந்த இனியா, இன்று நேராக சென்று சந்தோஷிடம் பேசுகிறார். தவறு செய்தது நான் தான் அதற்காக friendship விடவேண்டாம் என அம்மா தான் சொன்னார் என இனியா சொல்கிறார்.

இதை கேட்டு ஸந்தோஷும் மகிழ்ச்சி அடைகிறார். அதன்பின் சந்தோஷின் நண்பர்கள் இனியாவிடம் பேச முயற்சிக்க அவர்களை அண்ணா என அழைக்கிறார் இனியா. அதனால் அவர்களுக்கு நோஸ்கட் ஆகிவிடுகிறது.

எழிலுடன் சுற்றும் அமிர்தா - பார்த்துவிடும் அப்பா

எழில் தான் புது படத்தை நாளை தொடக்க இருப்பதாகவும், காலையில் பூஜைக்கு வந்துவிடும்படி அமிர்தாவை நேரில் சந்தித்து அழைக்கிறார் எழில்.

அவர்கள் ஒன்றாக பேசுவதை அமிர்தாவின் அப்பா பார்த்துவிடுகிறார். வீட்டில் இருக்கும்போது அவர் எழில் உடன் போனில் பேசுவதையும் பார்த்துவிடும் அவர் மனைவியிடம் சொல்லி கவலைப்படுகிறார்.

மசாலாவில் நல்ல லாபம் வருது..

பாக்யாவும் ஜெனியும் சேர்ந்து சென்று கான்வென்டில் மசாலா பொருட்களை கொடுத்துவிட்டு வருகிறார்கள். அதற்கான பணத்தையும் உடனே கௌத்துவிடுகிறார் கான்வென்ட் சிஸ்டர்.

அது பற்றி வீட்டில் கோபியிடம் கூர்கிறார் பாக்யா. இந்த ஒரே ஆர்டரில் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது என அவர் சொல்வதை கேட்டு கோபியின் முகம் மாறிவிடுகிறது.

இத்துடன் இன்றைய எபிசோடும் நிறைவு பெறுகிறது.

மசாலாவில் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது என

அடுத்த செய்தி