ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபியை வச்சு செய்ய போகும் ராதிகா.. குழம்பி தவிக்கும் பாக்யா..!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 24 May 2022, 9:35 am
தனம் தன்னிடம் பேசிவிட்டு போனதும், வீட்டில் நடந்தவற்றை பற்றியும் நினைத்து யோசனையில் இருக்கிறாள் பாக்யா. அப்போது செல்வி என்னக்கா எதோ யோசனையில் இருக்க என கேட்கிறாள். அதற்கு அவள் தனம் போகும் போது என்னை பார்த்து கட்டிப்பிடித்து அழுதுட்டு போனா. அதுவும் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா நாங்க குடும்பத்தோட வருவோம்ன்னு சொல்லிட்டு போனாங்க என்கிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அப்போது அங்கு வரும் ஈஸ்வரி கோபி எங்க ஆபிஸ் போயிட்டானா? அவன் கொஞ்ச நாளா சரியில்லை பாக்யா. அப்படி என்ன பிரச்சனை அவனுக்கும், மூர்த்திக்கும் என கேட்கிறாள். அதற்கு பாக்யாவும் மூர்த்தி தம்பி அவ்வளவு சுலபமா யார்க்கிட்டயும் சண்டை போட மாட்டாரு அத்தை என சொல்ல, அப்போது கோபி மாடியிலிருந்து கீழ் இறங்கி வருகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவனை கூப்பிட்டு உட்கார வைத்து உனக்கும் மூர்த்திக்கும் என்ன பிரச்சனை என கேட்கிறாள். அதற்கு அவன் ஒரு பிரச்சனையும் இல்லை. வந்ததுல இருந்து ஒரே அட்வைஸ். நின்னா, உட்கார்ந்த எதுக்கெடுத்தாலும் அட்வைஸ். மாடிக்கு கூட்டிட்டு போயிட்டு, அப்பாவை பார்த்துகோங்க. பாக்யாவை பார்த்துகோங்கன்னு அட்வைஸ் மழை. அதுனால தான் கோபத்துல கத்திட்டேன் என சொல்கிறான். அதற்கு ஈஸ்வரி பிடிக்கலன்னா பேசாம இருக்க வேண்டியது தான. அதுக்குன்னு வெளிய போக சொல்வீயா என கேட்கிறாள்.

உடனே கோபி எனக்கு அட்வைஸ் பண்ண பிடிக்காதுன்னு உங்களுக்கு தெரியும். அவ்வளவு தான்மா என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிடுகிறான். அவன் போனதும் இவன் பொய் சொல்றான் பாக்யா. அவன் சொல்ற மாதிரி இருந்தா, மூர்த்தி இங்கயே பேசி இருக்கும். இதுக்கு ஏன் மாடிக்கு கூட்டிட்டு போகணும். இவன் எவ்வளவு நாள் இப்படி பொய் சொல்றான்னு பார்க்கிறேன் என சொல்கிறாள் ஈஸ்வரி.

Bharathi Kannamma: லட்சுமி கேட்ட சவுக்கடி கேள்விகள்.. கண்ணீர் விட்டு கதறும் சௌந்தர்யா..!

இதனிடையில் காரில் போகும் போது அவன் பிரெண்ட் போன் பண்ணி வீட்டில் நடந்தவற்றை பற்றி பேசி கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு போன் பண்ணும் ராதிகா உடனே வீட்டுக்கு வாங்க. நான் உங்ககிட்ட பேசணும் என சொல்கிறாள். இதனால் கோபி குழப்பமடைகிறான். அந்த குன்னக்குடிகாரவங்க என்ன சொல்லிட்டு போனாங்களோ என யோசிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி