ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபியால் அசிங்கப்பட்டு நிற்கும் ராதிகா: மாஸ் காட்டிய பாக்யா.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்யா, ராதிகா நின்ற எரியா அசோசியேஷன் தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 13 Dec 2022, 10:09 am
எரியாவில் நடக்கும் அசோசியேஷன் தேர்தலில் பாக்யாவை ஜெயிக்க வைக்க இராமமூர்த்தி பிரச்சார வசனங்களை எழுதிக் கொண்டிருக்க, இனியா அதனை படிக்கிறாள். அப்போது அங்கு வரும் கோபி இந்த வீட்டில் உக்காந்துட்டு உங்க மருமகள் ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க. அவ ஜெயிக்கனும்னு நினைச்சா அங்க போய் பண்ணுங்க என கையில் இருந்த நோட்டைப்பிடுங்கி தூக்கி எறிகிறார். இதனைப்பார்த்து ராதிகாவும், இனியாவும் அதிர்ச்சியடைகின்றனர்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


கோபி போன பிறகு அவன் கிடக்குறான். நீ அந்த நோட்டை எடுத்துட்டு வா. நம்ம வேலையை பார்ப்போம் என இராமமூர்த்தி சொல்கிறார். இனியாவும் அம்மா தான் தாத்தா கண்டிப்பா ஜெயிப்பாங்க. நானும் என் பிரெண்ட்ஸ் எல்லார்க்கிட்டயும் சொல்லி அவுங்க வீட்ல இருக்குறவங்களை அம்மாவுக்கு ஓட்டு போட சொல்ல போறேன் என கூறுகிறாள். இதனால் ராதிகா அதிர்ச்சியடைகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் பாக்யா தனக்கு சமையல் ஆர்டர் வாங்கி கொடுத்த ராஜசேகரை சந்தித்து தனக்கு பணம் கிடைக்கவில்லை அதனால் இந்த ஆர்டரை எடுத்து செய்வது கஷ்டம் என சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். அவர் தொழிலில் எப்போதும் முன் வைத்த கலை பின் வைக்கக் கூடாது உங்களுக்கு பணம் தானே பிரச்சனை? நான் உங்களுக்காக சாட்சி கையெழுத்து போட்டா உங்களுக்கு லோன் கிடைக்கும்ல என சொல்ல பாக்யா சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி கூறுகிறாள்.

இராஜசேகரும் அவளுக்கு உதவுவதாக கூறி, அடுத்த வேலைகளை பார்க்குமாறு கூறி அனுப்பி வைக்கிறார். இதனிடையில் ஏரியா செக்ரட்டரி எலக்சன் தொடங்குகிறது. பாக்யா தனது குடும்பத்துடன் வர்ற, கோபி ராதிகாவை அழைத்து கொண்டு வருகிறான். அவனைப்பார்த்து ஈஸ்வரி கடுப்பாகிறாள். செக்கரட்ரி, இதுவரை நான் இந்த ஏரியாவை நல்லபடியாக பார்த்து கொண்டதாக டையலாக் பேச, எழில் மேடைக்கு வருகிறான்.

Bharathi Kannamma: பயரு பயரு.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா: ஆடிப்போன பாரதி.!

அவன் தேர்தல் நடைமுறைகள் எல்லாத்தையும் கூற, அனைவரும் ஓட்டு போட ஆரம்பிக்கின்றனர். அனைவரும் ஓட்டளித்த பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எழிலும், செழியனும் ஓட்டு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். முதலில் ராதிகா 112 ஓட்டுக்கள் பெற்றிருப்பதாக சொல்ல கோபி கைதட்டி சந்தோஷப்படுகிறார். ஓட்டு கமியா இருக்கே என்று ராதிகா வருத்தப்பட, அவ இதைவிட கம்மியா இருப்பா என கோபி டையலாக் அடிக்கிறான்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் உள்ள ஏரியாவில் 1100க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று பாக்யா வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்க கோபி அதிர்ச்சி அடைகிறான். இல்ல ஏதோ தப்பு நடந்து இருக்கு நீங்க ஓட்ட சரியா என்னல ராதிகா தான் ஜெயிச்சு இருக்கணும் என கோபி சத்தம் போட அதெல்லாம் சரியாத்தான் எண்ணி இருக்கோம் என ஓட்டு எண்ணிய அதிகாரி பதில் கொடுக்கிறார்.

Bharathi Kannamma: இரவோடு இரவாக கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பாரதி.!

பாக்யாவையே ஏரியாவின் புதிய செக்கரட்ரியாக அறிவிக்க எழிலும், செழியனும் அவளை தூக்கி கொண்டாடுகின்றனர். நடபதை எல்லாம் பார்த்து கோபி, ராதிகா ஷாக்காகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி