ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: தனத்துடன் ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யா.. வசமாக சிக்க போகும் கோபி..!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 12 May 2022, 9:26 am
கோபியுடன் பார்க்கிற்கு வாக்கிங் செல்கிறான் மூர்த்தி. அப்போது எப்பவும் வேலை வேலைன்னு இருக்காதீங்க. நம்ம சம்பாரிக்கிறதே குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறதுக்காக தான். நைட் எல்லாம் போன் பேசாதீங்க. சீக்கிரம் தூங்குனா தான காலைல ஆக்டிவா வேலை பார்க்க முடியும் என அட்வைஸ் பண்ணுகிறான் சத்தியமூர்த்தி. ஆஹா இவர் ஆரம்பிச்சுட்டாரே என கடுப்பாகிறான் கோபி.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இந்தப்பக்கம் வீட்டில் தனத்திடம் பக்கத்துல இருக்குற அம்மன் கோவிலுக்கு கதிரையும், முல்லையையும் அனுப்பி வைக்குமாறு சொல்கிறாள். அதன்பின்னர் பாக்யா கிச்சனில் வேலையாய் இருப்பதால் தனம், தாத்தாவுக்கு சாப்பாடு ஊட்டுகிறாள். அவருக்கு இவ்வளவு நாளா மகள் இல்லாத குறை தீர்ந்து போச்சும்மா என ஈஸ்வரி செல்கிறாள். இதனிடையில் எழில், கதிர் முல்லையை கோவிலுக்கு அழைத்து செல்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அங்கு அமிர்தா குழந்தையுடன் வரவும் அவளை அறிமுகம் செய்து வைக்கிறான் எழில். அவள் கதையை கேட்டு வருத்தமடைகின்றனர். அமிர்தா கிளம்பியதும், நான் என்னோட பிரச்சனை தான் பெருசுன்னு நினைச்சேன். ஆனா இங்க பலருக்கு அதைவிட பெரிய கஷ்டம்லா இருக்குல என கதிரிடம் சொல்கிறாள். அவனும் நீ புரிஞ்சுக்கிட்ட சரி என கூறுகிறான். இந்தப்பக்கம் வீட்டில் ஜீவா, மூர்த்தி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, கோபியை அழைத்தும் சாப்பிட சொல்கின்றனர்.

அதன்பின்னர் பிறகு கண்ணன், ஐஸ்வர்யா, இனியா, செல்வி ஈஸ்வரி அவருடைய கணவர் என எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது மீனாவும் ஐஸ்வர்யாவும் மாறி மாறி கலாய்த்து கொள்கின்றனர். பிறகு செல்வி கண்ணனிடம் ஐஸ்வர்யா கிட்ட என்ன புடிச்சு போய் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக் கேட்க கண்ணன் அதைத்தான் ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன் ஆனா என்னனு தெரியல என சொல்கிறான்.

உயிரை காப்பாற்றும் போராட்டத்தில் இறங்கிய பாரதி: அச்சத்தில் கண்ணம்மா..!

இதனிடையில் தனம் மற்றும் பாக்கியா ஆகியோர் ராதிகாவின் வீட்டிற்கு வருகின்றனர். ராதிகாவை தன்னுடைய மாமனாரின் பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறாள் பாக்கியா. மேலும் மயூவை மட்டுமில்லாமல் நீங்க கட்டிக்க போறவரையும் அழைச்சிட்டு வாங்க என பாக்கியா சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி