ஆப்நகரம்

Vijay Tv: எழில் விஷயத்தில் படு கேவலமாக நடந்து கொள்ளும் செழியன்: வர்ஷினியின் பிளான்.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து ஈஸ்வரியும், செழியனும் பேசுகின்றனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 24 Jan 2023, 9:28 am
ஜெனி வீட்டில் இருக்கும் போது வர்ஷினி வருகிறாள். அவளை பார்த்ததும் எதுக்காக இவ இங்க அடிக்கடி வர்றா? என்ன காரணமா இருக்கும் என யோசிக்கும் போதே அவள் உள்ளே நுழைகிறாள். பாட்டியை அவள் கூப்பிட செழியனும் வருகிறான். அவர்கள் மூன்று பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, என்னனமோ பேசி ஜெனியை உள்ளே அனுப்பி வைக்கின்றனர்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


மூவரும் ஏதோ ஒரு பிளான் போடுவதாக ஜெனிக்கு சந்தேகம் வருகிறது. ஈஸ்வரியிடம் பேசும் வர்ஷினி எழிலை கல்யாணம் பண்ணிக்க ஒரு வழி இருக்கு என சொல்லி எழிலுக்கு தேவையான மொத்த பணத்தையும் அப்பாவ கொடுக்க சொல்றேன் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்குவாரா என கேட்கிறாள். பணத்துக்காக தான் உன்ன அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று நினைக்கிறாயா என்ன ஈஸ்வரி கேட்க ஐயோ அப்படி இல்ல பார்ட்டி எனக்கு எப்படியாவது எழில கல்யாணம் பண்ணிக்கனும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

எப்படியாவது எங்களை நீங்க சேர்த்து வைங்க. இந்த வீட்டுக்கு நான் வரணும் என சொல்ல செழியனும் இது நல்லா ஐடியா தான் என கூறுகிறான். இந்தப்பக்கம் பாக்யாவும், இராமமூர்த்தியும் சொந்த ஊரில் இருக்கும் வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் திடீரென வந்திருப்பதை பார்த்து சொந்தக்காரர் ஒருவர் வந்து பேசி கொண்டிருக்கிறார்.

இந்தப்பக்கம் இரவில் எழில் போனில் அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் செழியன் அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கிறான். அவன் பேசி முடித்து வைத்ததும், செழியன் அமிர்தாவை விட்டுடு, நீ நினைக்கிறது கண்டிப்பா நடக்காது வீட்டில் யாருக்கும் அமிர்தாவை பிடிக்கல என சொல்கிறான். அதற்கு எழில் எனக்கு பிடிச்சிருக்கு. என்னைக்கா இருந்தாலும் நான்அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்குவேன் என உறுதியாக சொல்கிறான்.

Vijay Tv: பாக்யாவுக்காக இராமமூர்த்தி எடுத்த அதிரடி முடிவு: கோபத்தில் கொந்தளித்த ஈஸ்வரி.!

அதன் பிறகு செழியன் நான் மட்டும் உன்னுடைய இடத்துல இருந்திருந்தால் வர்ஷினி கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பணத்தை வாங்கிட்டு வந்து வீட்டு பிரச்சனையை சரி பண்ணி இருப்பேன் என சொல்கிறான். அதற்கு எழில், அந்த பணத்தை வாங்கிட்டு வந்து இருப்பேன்னு சொல்லு. ஆனா வீட்டு பிரச்சனையை தீர்த்து இருப்பேன் மட்டும் சொல்லாத. அதை நான் நம்ப மாட்டேன் என தடாலடியாக சொல்லிவிட்டு அங்கிருந்து போகிறான்.

மறுநாள் விடிந்ததும் செழியன் இந்த விஷயத்தை ஈஸ்வரியிடம் சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறாள். நாம ஏன் இந்த வீட்டு பிரச்சனையை வைத்து எழிலுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது. இந்த வாய்ப்பு விட்டா அவன் கண்டிப்பா அமிர்தாவை கல்யாணம் பண்ணிப்பான். அம்மாக்கூட இந்த விஷயத்துல அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க என்கிறான். ஈஸ்வரியும் அவன் சொல்வது சரியென்று நினைக்கிறாள்.

Baakiyalakshmi Serial: ஈஸ்வரிக்கு எழில் கொடுத்த அதிர்ச்சி: கடும் கோபத்தில் இராமமூர்த்தி.!

இந்தப்பக்கம் ராமமூர்த்தி ஒருவரை சந்தித்து வீடு 40 லட்சம் நிலம் ஏக்கருக்கு 10 லட்சம் என சொல்லி விற்பதற்காக பேசுகிறான். அதன்பின்னர் 1 லட்சம் குறைத்து 9 லட்சம் ரூபாய்க்கு விற்க முடிவெடுக்கிறார். இந்த பக்கம் செழியனும் ஈஸ்வரியும் வர்ஷினியின் அப்பாவை சந்தித்து பேசுகின்றனர். ஈஸ்வரி, எழில் கண்டிப்பா வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பான் என வாக்கு கொடுக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ‌
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி