ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: குடும்பத்தை எதிர்த்து மகனுக்காக பாக்யா செய்யும் காரியம்: பரபர திருப்பங்கள்.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் தான் உயிருடன் இருக்கும் வரை எழில், அமிர்தா திருமணத்தை நடத்தவிட மாட்டேன் என மிரட்டுகிறாள் ஈஸ்வரி.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 9 Feb 2023, 10:08 am
பாக்யா இந்த கல்யாணத்தை நடத்தவே விட மாட்டேன் என உறுதியாக கூறிவிடுகிறாள். உடனே வர்ஷினியின் அப்பா மொத்த குடும்பமும் கஷ்டப்படுவீங்க என சாபம் விட்டு மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். ஈஸ்வரி, கோபி, செழியன் கேட்டும் அவர் கோபத்துடன் சென்றிவிடுகிறார். அதன்பின்னர் கோபி, என்ன நினைச்சுட்டு இருக்க. நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்துட்ட.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


இப்ப நம்ம பையோட வாழ்க்கை என்ன ஆக போகுது. சினிமா சினிமான்னு அலைஞ்சான். இப்ப அதுவும் போச்சு என்கிறான். பாக்யா, எழில் அமிர்தாவை தான் விரும்புறான். அவளை தான் கல்யாணம் பண்ணனும் என சொல்ல, நான் உயிரோட இருக்க வரை நடக்கவிட மாட்டேன் என கண்டபடி பேசுகிறாள். அமிர்தாவிடன் அம்மா, அப்பாவையும் திட்ட ஆரம்பிக்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அன்னைக்கே உங்ககிட்ட சொன்னேன்ல இந்த கல்யாணம் செட் ஆகாது, எவனா இளிச்சவாயன் கிடைச்சா அவன் தலையில உங்க பொண்ணு கட்டி வைக்கலாம்னு பார்த்தீங்களா என சத்தம் போடுகிறாள். பாக்யா அவளை தடுத்து, நான்தான் அவுங்களை வர சொனேன் என்கிறாள். உடனே ஈஸ்வரி, என்ன தைரியம் இருந்தா, நான்தான் வர சொன்னேன்னு என்கிட்டயே திமிரா பேசுவ. என்ன நினைச்சு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க என பாக்யா மீது பாய்கிறாள்.

ராமமூர்த்தி ஏன் இப்படி பண்ணமா? எடுத்தேன் கவுத்தேனு இப்படியா பண்ணுவ? இந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தால் எழில் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும் என சொல்ல, எனக்கு கல்யாணம் ஆகி 25 வருஷம் ஆகுது, பெரியவங்க எல்லாம் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைச்சு தான் உங்க பையனுக்கு பிடிக்காத இந்த கல்யாணத்தை பண்ணி வச்சீங்க. ஆனா இந்த 25 வருஷமா நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா அத்தை?

Vijay Tv: சத்தியமா இதுதான் நடந்தது: குக் வித் கோமாளி ஓட்டேரி சிவா கண்ணீர்.!

பிடிக்காதுன்ற வார்த்தையை இந்த எட்டு மாதமா தான் நான் கேக்காம இருக்கேன். இதே வாழ்க்கையை என் பையன் வாழக்கூடாது. அவனுக்கு பிடிச்ச பொண்ணோட தான் கல்யாணம் நடக்கணும். நான் இப்போ என் பையன் பக்கம் தான் நிக்கணும். இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும், பணத்துக்காக என்னுடைய பையனுடைய வாழ்க்கையை அடமானம் வைக்க முடியாது என சொல்கிறாள்.

Baakiyalakshmi Serial: கல்யாணத்தை நிறுத்தி மாஸ் காட்டிய பாக்யா: ஆத்திரத்தில் பொங்கிய கோபி.!

நான் உங்களை மரியாதை குறைவா பேசுறதா நினைச்சாலும் பரவாயில்லை. இப்போ உங்களுக்கு மருமகளாய் இருக்கிறதை விட என் மகனுக்கு அம்மாவா இருக்கிறது தான் முக்கியம் என சொல்லி எழிலை மணமேடையில் உட்காரச் சொல்கிறாள். அவன் தயக்கத்துடன் எப்படி மா என கேட்க, ராமமூர்த்தி இதெல்லாம் சரியா வருமா என தயங்குகிறார். பாக்யா, தயவுசெய்து இதுக்கு மேலயும் இத பத்தி எதுவும் பிரச்சனை செய்ய வேண்டாம் என சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி