ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: தாத்தாவுக்கு தெரிய வந்த அதிர்ச்சிகரமான உண்மை: எழில் விஷயத்தில் அதிரடி முடிவு.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 8 Dec 2022, 10:05 am
இனியாவும், இராமமூர்த்தியும் வெளியில் சென்றிருந்த சமயத்தில் மயூவும் தூங்கிவிடுகிறாள். அந்த சமயத்தில் கோபி ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறான். அப்போது வெளியில் சென்றிருந்த இனியாவும் வீட்டுக்கு வர்ற உடனே அவனை கீழே தள்ளிவிடுகிறாள் ராதிகா. இனியா பதட்டத்துடன் என்னாச்சு டாடி என கேட்டு வர்ற, போன் விழுந்துருச்சு. எடுக்க வந்தேன் என் சொல்லி சமாளிக்கிறான்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அதன்பின்னர் இராமமூர்த்தியும் அங்கு வர்ற கோபியின் முகமே சரியில்லை என கவனிக்கிறார். இந்தப்பக்கம் பாக்யா லோன் விஷயமாக செல்வியை அழைத்து கொண்டு பேங்கிற்கு செல்கிறாள். அந்த பேங்க் மேனேஜர் இவர்களை கடுப்புடன் பார்க்கிறான். லோன் விஷயம் பற்றி பேசும் போது கோபியின் டாக்குமெண்ட் வேண்டுமென கேட்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதற்கு பாக்யா அவளுக்கும் கோபிக்கும் டைவர்ஸ் ஆன விஷயத்தை கூறுகிறாள். அதனை ஏற்று கொள்ளாத மேனேஜர், வேற எந்த அடிப்படைலையும் லோன் கொடுக்க முடியாது என கூறிவிடுகிறார். பாக்யா ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வருகிறாள். இதனிடையில் இராமமூர்த்தி வீட்டுக்கு வர்ற அவனிடம் எழிலின் காதல் விஷயத்தை போட்டுடைக்கிறாள் ஈஸ்வரி.

அமிர்தாவை அவன் காதலிப்பதாக தெரிந்து ஷாக்காகிறார். இரக்கப்படுறது வேற. வாழ்க்கை வேற. இதெல்லாம் சரியா வராது. நான் அவன்கிட்ட பேசுறேன் என கூறுகிறார். அதற்கு ஈஸ்வரி, வேணாம். நீங்க பேசுனா உங்களையே சமாளிச்சுடுவான். நானே அவன்கிட்ட உறுதியாய் சொல்லிட்டேன். சீக்கிரமே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்கிறாள். அந்த சமயத்தில் எழிலும் வர, அவனிடம் பேசுகிறார் இராமமூர்த்தி.

Bharathi Kannamma: கிழிந்த வெண்பாவின் முகத்திரை.. அடிக்க பாய்ந்த பாரதி: பரபர திருப்பங்கள்.!

அப்போது ஊரில் நல்ல பெண் இருப்பதாக கூறுகிறார். அதனைக்கேட்டு எழில் ஷாக்காகிறான். அந்த சமயத்தில் பாக்யாவும் அங்கு வர்ற, லோன் கொடுக்க முடியாது எனக்கூறிய விஷயத்தை சொல்கிறாள். உடனே இராமமூர்த்தி ஊர்ல இருக்குற சொத்தை வைச்சு பிசினஸ் பண்ணும்மா என கூற, ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என்கிறாள். இருக்குற வேலையை பாரு பாக்யா என கூறுகிறாள். இத்னைக்கேட்டு அவளும் அமைதியாக உள்ளே சென்றுவிடுகிறாள்.

அதன் பிறகு அசோசியேஷன் மீட்டிங் நடக்க அங்கு கோபி பழைய தலைவருக்கு ஆதரவாக உட்கார்ந்து இருக்கிறான். செக்கரட்ரி பாக்கியா நிற்பதாக சொல்லிவிட்டு நிற்கவில்லை என நக்கலாக பேசிக் கொண்டிருக்க கோபி சிரித்து வெறுப்பேற்றுகிறான். யாரும் தேர்தலில் நிற்க ஒத்துக் கொள்ளாததால் தன்னுடைய மனைவியை வெற்றியாளராக அறிவித்து விடட்டுமா என அசோசியேசன் தலைவர் சொல்ல, அனைவரும் பாக்யாவை நிற்க சொல்கின்றனர். அவளும் யோசிக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Bharathi Kannamma: உன்னால குழந்தை பெத்துக்க முடியாது: அடுத்த குண்டை தூக்கி போட்ட வெண்பா.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி