ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: நடுரோட்டில் கதறி அழுத பாக்யா, எழில்: சதித்திட்டம் தீட்டிய ஈஸ்வரி.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்யாவும், எழிலும் அமிர்தாவின் பெற்றோர்கள் ஊரை விட்டு கிளம்பியது தெரிந்து கதறி அழுகின்றனர்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 24 Dec 2022, 10:07 am
அமிர்தா வீட்டிற்கு நேரில் சென்று பேச முடிவு செய்கிறாள் பாக்யா. மறுநாள் எழிலை கிளம்ப சொல்கிறாள். இந்தப்பக்கம் ஈஸ்வரியும் வர்ஷினி அப்பாவை பார்த்துவிட்டு வரலாம் என செழியனிடம் கூறுகிறாள். அவன் தயங்கும் போது, இந்த எழில் வேற சரியில்லை. எப்போ என்ன பண்ணுவான்னு தெரியலை. அதுனால நம்ம நேர்ல போய் அவர்க்கிட்ட பேசிட்டு வந்துடுவோம் என கூறுகிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


பாக்யாவும் எழிலும் கிளம்பி வந்து ஈஸ்வரியிடம் சதீஷின் பாட்டி இறந்துவிட்டதாகவும், அதனால் நேரில் சென்று பார்த்துவிட்டு வருவதாகவும் பொய் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அமிர்தா வீட்டு வாசலுக்கு வந்து பார்க்கும் போது தான் அவர்கள் வீடு பூட்டி இருப்பது தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைகின்றனர். பக்கத்தில் வீட்டில் இருக்கும் பெண்ணிடம் அவர்கள் எங்கு போயிருப்பதாக விசாரிக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவர்கள் ஊரை விட்டு போயிருப்பதாக சொல்லவும் எழில் அதிர்ச்சியுடன் நான் நேத்து தான் பார்த்துட்டு போனேன் என கூறுகிறான். ஆனால் அவர்கள் இன்று காலையில் தான் அவர்கள் ஊரை விட்டு போனதாகவும், போறதுக்கு முன்னாடி இனிமேல் வர மாட்டேன் என்று பக்கத்து வீட்டில் எல்லாம் சொல்லிவிட்டு போனதாக கூறுகிறாள். இதனால் எழில் கதறி அழுகிறான்.

அமிர்தா வீட்டு வாசல் முன்பே அவன் கதறி அழுக பாக்யா அவனை சமாதானப்படுத்தி அவளும் கண் கலங்குகிறாள். இந்தப்பக்கம் ஈஸ்வரியும், செழியனும் தனியாக குசுகுசுவென பேசிக்கொள்வதை செல்வியும், ஜெனியும் கவனிக்கின்றனர். இருவரும் சேர்ந்து ஏதோ ஒன்று செய்வதாக யோசிக்கின்றனர். இருவரும் கோவில் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்புகின்றனர்.

Bharathi Kannamma: பாரதிக்கு எதிராக கண்ணம்மா செய்த காரியம்: கடுப்பான லஷ்மி.!

ஈஸ்வரி வர்ஷினி வீட்டில் அவருடைய அப்பாவை பார்த்து பேச அவர் என் பொண்ணு எது கேட்டாலும் மறுப்பு சொல்ல மாட்டேன். எழில் நல்ல பையன் என்பதால் தான் எதுவும் சொல்லல. ஆனா எழிலுக்கு இதுல சம்மதமா என கேட்க அதெல்லாம் அவன் சம்மதிப்பான் என செழியன் கூறுகிறான். அதற்கு வர்ஷினி அப்பா எனக்கு எழில் வந்து நேர்ல சொல்லணும் என கூறுகிறார்.

Baakiyalakshmi Serial: பாக்யாவை பற்றி படு கேவலமாக பேசிய கோபி: வச்சு செய்த தாத்தா.!

உடனே ஈஸ்வரி எங்க குடும்பத்தோட வந்து பொண்ணு கேட்கிறோம் என வாக்கு கொடுத்துவிட்டு கிளம்புகிறாள். பாக்யா வீட்டுக்கு வந்ததும் செல்வி உன் மாமியார் ஏதோ சதி திட்டம் தீட்டுறாங்க என சொல்ல ஜெனியும் பாட்டியும் செழியனும் ஏதோ ரகசியம் பேசுகிறார்கள் என கூறுகிறாள். பாக்யா அதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் எழிலை நினைத்து வருத்தப்படுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி