ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: வெட்ட வெளிச்சத்துக்கு வந்த கோபி - ராதிகா உறவு: அதிர்ச்சியில் பாக்யா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 6 Jul 2022, 9:33 am
மழையில் நனைந்து கொண்டே வீடு வந்து சேரும் பாக்யாவை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர் செல்வியும், சத்தியமூர்த்தியும். அவளை புடவையை மாத்தி கொண்டு வரும்படி மாடிக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனிடையில் ஹாஸ்பிட்டலில் கோபி தனக்கு எதுவும் ஆகவில்லை. பயப்பட வேண்டாம் என சொல்கிறான்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அப்போது எழில் அம்மாவை இன்னமும் காணவில்லை என யோசிக்க, ஜெனியும் வந்து கேட்கிறாள். அதன்பின்னர் இருவரும் ரிசப்சனுக்கு வந்து கோபி மனைவி வந்தாங்களா என கேட்கின்றனர். அவர்கள் ராதிகாவை கேட்பதாக நினைத்து, ஆமா வந்தாங்க. பணம் எல்லாம் கட்டிட்டு தான் போனாங்க என சொல்கிறார்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் எழில் அம்மா அப்பாவை இந்த நிலைமைல விட்டுட்டு போக மாட்டாங்களே? என்னாச்சு என யோசிக்கின்றனர். அதனை தொடர்ந்து கோபியுடன் ஈஸ்வரி பேசி கொண்டிருக்கும் போது, பாக்யா இங்கயும் வரலன்னா எங்க போயிருப்பா? என கேட்க, ஆமா எல்லாரும் வந்து இருக்கீங்க. பாக்யா எங்க என கேட்கிறான் கோபி.

அதற்கு எழில் அம்மா இங்க வந்து பீஸ் எல்லாம் கட்டிட்டு தான் போயிருக்காங்க என சொல்கிறான். உடனே கோபி, பாக்யா வந்தாளா? என்னை பார்க்கவே இல்லையே. வீட்ல வேற அம்மா அவசரமா வர சொன்னாங்க. என்னான்னு புரியலையே என யோசிக்கிறான். ஈஸ்வரியும் வீட்டுக்கு போய் எல்லாத்தையும் பேசிக்கலாம் என சொல்கிறான்.

Bharathi Kannamma: கண்ணம்மாவை கண்டபடி திட்டி தீர்த்த பாரதி: குழப்பத்தில் லஷ்மி.. !

இதனிடையில் மாடியில் பேயறைந்ததை போல் பாக்யா இருக்க, செல்வி வந்து என்னாச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பாக்யா கோபத்தில் கத்த கீழே வந்துவிடுகிறாள். அதன்பின்னர் செழியன், இனியா, ஜெனி வீட்டுக்கு வருகின்றனர். ஜெனியை அழைத்து கொண்டு பாக்யாவை மாருபடியும் பார்க்க போகிறாள் செல்வி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி