ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கடும் சிக்கலில் எழில்: வர்ஷினி போடும் புதிய திட்டம்.!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்டில் கோபியிடமிருந்து வீட்டை வாங்க முடிவு செய்யும் எழில் அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்குகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 18 Jan 2023, 10:07 am
வீட்டில் நடக்கும் பிரச்சனைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ரூமில் கேம் விளையாடி கொண்டிருக்கும் செழியனிடம் ஜெனி பேசுகிறாள். வீட்ல எவ்வளவு பிரச்சனை நடக்குது. நீ என்ன பண்ண போற என கேட்க, நான் என்ன பண்ணனும். வீட்டுக்கு முன்னாடி அப்பா பெயர் இருந்தா எழிலுக்கு என்ன பிரச்சனை. அதான் அப்பா நம்மள வீடு வாங்க சொல்லிட்டாருல. அதுவரை வேணா நம்ம உங்க வீட்ல போய் இருக்கலாம் என கூறுகிறான்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


இதனைக்கேட்டு ஷாக்காகும் ஜெனி நான் நம்ம வீட்ல இருக்க எல்லாரையும் பற்றி பேசுறேன் என கேட்கிறாள். அதற்கு அவன் தாத்தா, இனியா அப்பா வீட்ல இருக்காங்க. பாட்டியையும் அப்பா பார்த்துக்குவாரு. அம்மாவை எழில் பார்த்துப்பான் என்கிறான். உன்கிட்ட பணம் இல்லையா என ஜெனி மேலும் கேட்கும் போது, என் பணத்தை கொடுத்து அம்மா பேர்ல வீட்டை வாங்கி, அதுக்கப்புறம் எழில் இனியாவுக்கு பிரிச்சு கொடுக்க சொல்றீயா? என் தலைல என்ன இளிச்சவாயன்னு எழுதி இருக்கா என கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் எழில் தனியாக உட்கார்ந்து யோசனையில் இருக்க பாக்யா வந்து உட்கார்ந்து நீ உன் சினிமாவை மட்டும் பாரு நான் இந்த பிரச்சனை பாத்துக்குறேன் என சொல்கிறாள். எழில் இந்த வீட்டை நாம கண்டிப்பா வாங்குறோம், நான் சொன்ன மாதிரி இந்த வீட்டை வாங்க தான் போறேன். அதற்கான என்ன வழி இருக்கோ அத நான் செய்யப் போறேன் என உறுதியாக சொல்லிவிடுகிறான்.

மறுநாள் எழில் தன்னுடைய நண்பன் சதீஷை பார்த்து பிரச்சனையை சொல்லி ஏற்கனவே தயாரிப்பாளர் ராஜசேகர் ஒருத்தர் நம்ம கதையை மட்டும் கேட்டாரு, அவர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கேன் இந்த கதையை அவருக்கு கொடுத்துட்டு பணம் வாங்கலாம் என சொல்லி தயாரிப்பாளரை பார்க்க கிளம்பி செல்கிறான்.

Bharathi Kannamma: உயிருக்கு போராடும் பாரதி: கண்ணம்மாவிடம் கெஞ்சிய லஷ்மி, ஹேமா.!

அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி வர்ஷினியை சந்தித்து வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்கிறாள். வர்ஷினி பணம் ஏதும் தேவையா அப்பாகிட்ட சொல்லி ரெடி பண்ணவா என கேட்க ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். எழிலுக்கு அப்போ பணம் தேவைப்படுகிறது. அதை வைச்சு ஏதாவது பண்ணலாம் என யோசிக்கிறாள் வர்ஷினி.

Baakiyalakshmi Serial: பாக்யாவுக்கு எதிராக கோபி செய்த மட்டான காரியம்: சவால் விட்ட எழில்.!

அதன் பிறகு எழில் ராஜசேகர் எனும் தயாரிப்பாளரை சந்தித்து பேசுகிறான். மேலும் தன்னிடம் இரண்டு கதைகள் இருப்பதாகவும் அதை உங்களுக்கே கொடுத்து விடுகிறேன் என சொல்கிறான். அனால் தயாரிப்பாளர் உங்க கதை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா அதை நீங்க டைரக்ட் பண்ண முடியாது என சொல்கிறார். இதனால் எழில் அதிர்ச்சி அடைகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி