ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: பாக்யா தலையில் இடியை இறக்கிய எழில்: பரபர திருப்பம்.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் எழிலுக்கும், வர்ஷினிக்கும் கல்யாணம் செய்து வைப்பது குறித்து பாக்யாவிடம் பேசுகிறாள் ஈஸ்வரி.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 31 Jan 2023, 10:23 am
எழில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்ததும் உடனே கல்யாணத்தை நடத்த ஈஸ்வரியும், இராமமூர்த்தியும் முடிவு செய்கின்றனர். அவர்கள் பேசி முடித்த பிறகு ஹாஸ்பிட்டல் சென்ற ஜெனியும், கேட்டரிங் ஆபிஸ் சென்ற பாக்யாவும் வீட்டிற்கு வருகின்றனர். அதன்பின்னர் அனைவரையும் அழைத்து பேசுகிறாள் ஈச்வரி. எழில் பேயறைந்ததை போல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறான்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


எழிலுக்கு கல்யாணம் முடிவு செய்துவிட்டதாக இராமமூர்த்தி சொன்னவுடனே ஷாக்காகிறாள் பாக்யா. என்ன மாமா திடீர்ன்னு என கேட்க, அவனுக்கும் வயசு ஆகுதுல. நாங்க முடிவு பண்ணிட்டோம். யாரும் எதுவும் பேசாதீங்க. நாங்க சொல்றதை மட்டும் கேளுங்க என ஈஸ்வரி சொல்கிறாள். சீக்கிரம் அவனுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் என சொல்ல இன்னும் ஜெனியும், பாக்யாவும் ஆடிப்போகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இராமமூர்த்தி எழில் சினிமாவையும் பார்க்கணும். அவன் இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா சினிமாலையும் ஜெயிச்சுருவான் என சொல்கிறார். உடனே பாக்யா இதுக்கு எழில் சம்மதிக்கனும்ல என கேட்கிறாள். அதெல்லாம் அவன் சொல்லித்தான் பேசுறோம் என ஈஸ்வரி அதிர்ச்சி கொடுக்கிறாள். எழிலிடம் கேட்கும் போது அவன் தலையை மட்டும் கண்ணீருடன் எழுந்து செல்கிறான்.

பாக்கியா எழிலை கையை பிடித்து நிறுத்த எழில் அமைதியாக வெளியில் சென்று விடுகிறான். அவன் போனதும் எப்படி மாமா இதெல்லாம் சரியா வரும் என பாக்யா கேட்கிறாள். உடனே ராமமூர்த்தி இப்போ மட்டும் இந்த கல்யாணம் நடக்கலான, எழில் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிப்பான். நீ யாரையும் நம்ம வேணாம். என்ன நம்பு. நான் எது பண்ணாலும் எழிலோட நல்லதுக்காக தான் இருக்கும், இத பத்தி எதுவும் பேசாத என சொல்ல பாக்கியா அங்கிருந்து நகர்ந்து விடுகிறாள்.

Vijay Tv: இறுதியாய் தனது போராட்டத்தில் ஜெயித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!

அடுத்து ஈஸ்வரி ராமமூர்த்தி செழியன் என மூவரும் வர்ஷினியின் அப்பாவை சென்று சந்திக்கின்றனர். எழில் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன விஷயத்தை பற்றி கூற, பணத்துக்காக எதுவும் சம்மதிக்கலையே என கேட்கிறார் வர்ஷினி அப்பா. அதற்கு இராமமூர்த்தி எங்களுக்கு பண தேவை முக்கியம் தான். எழில் எப்போதும் அவன் கடமைல இருந்து தவறுனது இல்லை. அதே மாதிரி ஒரு புருஷன் ஆகவும் நல்லபடியா நடந்துக்குவான் என வாக்கு கொடுக்கிறார்.

Bharathi Kannamma: பாரதி எடுத்த இறுதி முடிவு: கதறி அழுத கண்ணம்மா.!

அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் செய்ய முடிவு செய்கின்றனர். இந்தப்பக்கம் எழில் அமிர்தாவை சந்திக்க வருகிறான் அவள் வந்ததும் ஏதேதோ பேச எழில் சிலையாக நிற்கிறான். அவளைப்பார்த்து கைகூப்பி கண் கலங்கி அழுகிறான். பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா என அமிர்தா கேட்க எழில் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி