ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: எழில், அமிர்தா காதலுக்கு முடிவு கட்டிய ஈஸ்வரி: ஆடிப்போன பாக்யா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 6 Dec 2022, 9:53 am
அமிர்தா பற்றி எழிலிடம் பேசும் ஈஸ்வரி நீயும், அவளும் எப்பவுமே பிரெண்டா இருக்கணும். அதை தாண்டி எதையும் யோசிக்கக்கூடாது. செழியன் தான் அவனோட கல்யாண விஷயத்துல ஏமாத்திட்டான். கோபியும் நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான். நீயும் அந்த மாதிரி எதுவும் பண்ணிடக்கூடாது என சொல்லி எழில் கையை எடுத்து தனது தலையின் மீது வைக்கிறாள் ஈஸ்வரி.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இதனால் பாக்யா பேரதிர்ச்சியடைகிறாள். எழில் அமைதியாகவே நிற்க, சத்தியம் பண்ணு என கேட்கிறாள். எழிலும் வேற வழி இல்லாமல் சத்தியம் பண்ணுகிறான். நடந்த சம்பவங்களை எல்லாம் பார்த்து ஆடிப்போகிறாள் பாக்யா. அதன்பின்னர் அவன் மாடிக்கு போனதும், உன்னை சொல்லணும் பாக்யா. அந்த அமிர்தா வீட்டுக்கு வந்தப்பவே, ரெண்டு பேரையும் பழக விடாதுன்னு சொன்னேன். ஆனா நீதானா அமிர்தாவை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுன.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜெனி நம்ம வீட்டுக்கு வந்தப்பவும் இதேதான் சொன்னேன். ஆனால் அது கல்யாண வரையும் போயிருச்சு. எழில் விஷயத்துல அதை நடக்க விட மாட்டேன். அவனுக்கு அவளை பிடிச்சு இருந்தாலும் நீதான் எழிலுக்கு பேசி புரிய வைக்கணும் என சொல்லிவிட்டு செல்கிறாள். அதன்பின்னர் பாக்யாவையும், செல்வியையும் ரோட்டில் பார்க்கும் ஏரியா செக்கரட்ரி அவளிடம் நக்கல் பண்ணுகிறான். அருகிளிருப்பவர்களிடம் இவுங்கதான் கோபி சாரோட எக்ஸ் வைப் என திமிராக பேசுகிறான்.

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய வெண்பா: அதிரடியாய் கைது செய்த போலீஸ்.!

அவனிடம் தேவையில்லாம பேசாதீங்க. நான் எலக்ஷன்ல நிற்கிறேன்னு உங்ககிட்ட சொன்னேனா? நான் எலக்ஷன்ல எல்லாம் நிற்கலை என சொல்லிவிட்டு கிளம்புகிறாள். செல்வி எவ்வளவு எடுத்து சொல்லியும் பாக்யா தனது முடிவில் உறுதியாக நிற்கிறாள். அதன்பின்னர் லோன் விஷயமாக பேச பேங்கிற்கு செல்கிறாள். ஆனால் அங்கு அவர்கள் கோபியின் டாக்குமெண்ட்யும் வேணும். அது இருந்தால் தான் லோன் கிடைக்கும் என பேங்கில் கூறுகின்றனர்.

Bharathi Kannamma: அப்பாவிற்காக உயிரை மாய்த்து கொள்ள துணிந்த ஹேமா: பாரதியின் அதிரடி முடிவு.!

இதனால் என்ன செய்வதென்று புரியாமல் பாக்யா வீட்டுக்கு வருகிறாள். அவள் வந்ததும் பேங்கில் என்ன சொன்னாங்க? என்னாச்சு என எழில் விசாரிக்க, பேங்கில் நடந்த விஷயங்கள் பற்றி பாக்யா கூறுகிறாள். அதற்கு எழில் அதெல்லாம் பிரச்சனை இல்லை. எப்படியாவது பணம் அரேஜ் பண்ணலாம் என சொல்ல, ஈஸ்வரி லோனும் வேணாம். எதுவும் வேணாம். இருக்குற வேலையை பாரு பாக்யா என கூறிவிடுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி