ஆப்நகரம்

Baakiylakshmi Serial: ஈஸ்வரியின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய எழில்: ஆடிப்போன பாக்யா.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் எழிலை பார்க்க வரும் அமிர்தாவை அசிங்கப்படுத்தி வெளியில் துரத்துகிறாள் ஈஸ்வரி.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 6 Feb 2023, 10:08 am
அமிர்தாவை கல்யாண மண்டபத்தில் பார்த்து பேரதிர்ச்சி அடைகிறாள் ஈஸ்வரி. உடனடியாக ஜெனியை உடன் அழைத்துக்கொண்டு அமிர்தாவை வலுக்கட்டாயமாக கையை பிடித்து வெளியில் அழைத்து வருகிறாள். வந்ததும் என்ன தைரியம் இருந்தா இவ்வளவு தூரம் வந்துருப்ப? நீ வீட்டுக்கு வரும் போதே நினைச்சேன். என் பேரனை வளைச்சு போடலாம்ன்னு பார்க்குறீயா என படு கேவலமாக பேசுகிறாள்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


அவள் பேசுவதை கேட்டு ஜெனியும், அமிர்தாவும் ஷாக்காகின்றனர். ஜெனி எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்காமல், இந்த கல்யாணத்தை நிறுத்து வந்தியா? அது மட்டும் நடந்துச்சு, அவ்வளவு தான் பார்த்துக்கோ என கன்னாபின்னாவென்று பேசுகிறாள். அமிர்தா, அப்படி எல்லாம் இல்லை பாட்டி. எனக்கு எழிலுக்கு கல்யாணம்ன்னு தெரியவே தெரியாது. நான் யாரோட கல்யாணத்தை நிறுத்தவும் வரலை என சொல்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆனால் அதையெல்லாம் கேட்காமல் மொத இவளை வெளிய அனுப்பி, கேட்டை சாத்து என்கிறாள். இதையெல்லாம் கேட்டு அமிர்தா கதறி அழ, நான் அவுங்களை அனுப்பி வைக்கிறேன். நீங்க போங்க பாட்டி என சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைக்கிறாள். அதன்பின்னர் அமிர்தாவை தனியாக அழைத்து வருகிறாள். ஜெனியிடமும் எனக்கு எழில் கல்யாணம்ன்னு தெரியாது. தெரிஞ்சு இருந்தா வந்து இருக்கவே மாட்டேன். உடனே கிளம்பவும் முடியலை. எனக்கு ஒரு மாதிரி பதட்டமா இருக்கு என சொல்கிறாள்.

அவளிடம் எழிலை கூப்பிடவா என கேட்க, அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறாள். ஆனால் சொல்லலை என்றால் தப்பாகிவிடும் என நினைக்கும் ஜெனி, உடனடியாக மண்டபத்திற்குள் செல்கிறாள். மேடையில் யாரும் இல்லாத சமயத்தில் நடந்த விஷயத்தை சொல்கிறாள். அதனைக்கேட்டு அதிர்ச்சியடையும் எழில், உடனடியாக வெளியில் வருகிறான். பாக்யா அவன் வேகமாக போவதை பார்த்து அவளும் பின்னாடியே வருகிறாள்.

Baakiyalakshmi Serial: அமிர்தாவை படு கேவலமாக பேசிய ஈஸ்வரி: வசமாக சிக்கிய கோபி.!

அந்த சமயத்தில் வெளியில் போகும் அமிர்தா கையை பிடித்து தனியாக அழைத்து வந்து பேசுகிறான். பாக்யாவும், ஜெனியும் அவர்கள் பேசுவதை கேட்கின்றனர். எழில் அவளிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறான். என் அப்பா. அவரை அப்பான்னு சொல்லக்கூட தகுதி இல்லாத ஆளு. வீட்டை வாங்க கெடு கொடுத்து இருக்காரு. இந்த வீடு போய்ட்டா என் குடும்பமே உடைஞ்சுடும். இனியா சின்ன குழந்தை எனக்கு போன் போட்டு அழுகுறா.

Vijay Tv: புதிய பாரதியாக சன் டிவி பிரபலம்: கலக்கலாக துவங்கிய 'பாரதி கண்ணம்மா' சீசன் 2.!

வர்ஷினி அப்பாவை தாண்டி இன்டன்ஸ்ரில எதுவுமே பண்ண முடியலை. நான் படம் பண்ணாம இருக்குறதை நினைச்சு கூட கவலைப்படல. ஆனா பாட்டி என் கால்ல விழுந்து கெஞ்சுறாங்க. எனக்கு வேற வழி தெரியலைங்க. நான் எனன் காரணம் சொன்னாலும் உங்களுக்கு பண்ணது துரோகம் மன்னிச்சுடுங்க என கையெடுத்து கும்பிடுகிறான். இதையெல்லாம் கேட்டு பாக்யா ஆடிப்போகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி