ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: அம்மாவுக்காக இனியா செய்த காரியம்: கண் கலங்கி நின்ற பாக்யா.!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியலில் எழில் தனது அம்மாவுக்கு உதவி செய்வதற்காக வேறு வேலைக்கு போவதாக கூறுகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 6 Jan 2023, 10:09 am
பாக்யா வாசலிலே யாருக்காகவோ காத்து கொண்டிருக்க செல்வி வெளியில் வந்து யாருக்கு வர்றா என கேட்கிறாள். அதெல்லாம் யாரும் வரலை. நீ போய் வேலையை பாருடி எனக்கூற இல்லையே அக்கா நீ இப்படியெல்லாம் வெளிய நிற்க மாட்டீயே என்கிறாள். அப்போது இனியா வீட்டிலிருந்து வெளியில் வர்ற பாக்யா அவளுக்காக காத்து கொண்டிருக்கிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இராமமூர்த்தியும் வெளியில் வர்ற அம்மாவுக்கு நான் டியூஷன் போறது தெரியுமா என கேட்க தெரிஞ்சு இருக்கும். அதான் உனக்காக வெளிலயே நிற்கிறாளே என கூறுகிறாள். அதற்கு இனியா நீங்களும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க தாத்தா என்கிறாள். உடனே இராமமூர்த்தி நாங்க டியூஷன் போறோம். டியூஷன் போறோம் என கத்திவிட்டு சொல்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனால் பாக்யா சந்தோஷத்தில் கண் கலங்குகிறாள். இதனிடையில் கோபி தன்னுடைய நண்பர் சதீஷை பார்த்து ராதிகா குடும்ப செலவுக்கு மட்டுமே 50,000 பணம் கேட்ட விஷயத்தை சொல்லி இந்த பிசினஸை வச்சுக்கிட்டு மட்டும் ஃபேமிலிய சமாளிக்க முடியுமான்னு தெரியல என புலம்புகிறான். அந்த வீட்ல இருக்கும் போது பாக்யாக்கிட்ட வெறும் பத்தாயிரம் தான் கொடுப்பேன். அதை வச்சு எல்லாருக்கும் விதவிதமா சமைச்சு போடுவா.

ஆனா இங்க முக்கால்வாசி நாள் ஹோட்டல்ல தான் சாப்பாடு வாங்குறோம். ராதிகா அதிகமா செலவு பண்ற என கூறுகிறாள். உடனே அவன் நண்பன், அதான் ராதிகாவும் சம்பாதிக்குறாங்கள்ள. அப்பறம் என்ன என கேட்கிறான். அதற்கு கோபி, நான் அவுங்களை பார்த்துக்கிறேன்னு கூட்டிட்டு வந்துருக்கேன். அப்படி இருக்கும் போது எப்படி அவளை செலவு பண்ண சொல்ல முடியும் என்கிறான். அதற்கு அவன் பிரெண்ட், உனக்கு இதெல்லாம் தேவைதான். இனிமே தான் ஆட்டம் இருக்கு என கூறுகிறான்.

Vijay Tv: பாரதியுடன் சேர்ந்து கண்ணம்மாவை அசிங்கப்படுத்திய லட்சுமி: கடும் கோபத்தில் ஹேமா.!

இந்தப்பக்கம் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வருகிறாள். நாளைக்கு சொந்தக்காரங்க எல்லாம் இங்க வருவாங்க. எங்க சைடுல சின்ன சம்பிரதாயம் இது என்கிறாள். அதன்பின்னர் மறுநாள் பங்க்ஷனுக்காக செழியன் பொருட்கள் எல்லாம் வாங்கி கொண்டு வரும் போது கோபி பார்த்து பேசுகிறான். என்ன பங்க்ஷன் என கேட்கும் போது ஜெனி வீட்டிலிருந்து வரப்போகும் விஷயத்தை சொல்லிவிட்டு உள்ளே போகிறான். அதன்பின்னர் கோபி வீட்டையே ஏக்கமாக பார்க்கிறான்.

அதன்பின்னர் பாக்யா கிச்சனில் இருக்கும்போது அங்கு வரும் எழில் நீ ரொம்ப கஷ்டப்படுறமா. நான் கண்டிப்பா படம் பண்ணி இந்த கஷ்டத்தை எல்லாத்தையும் சரி பண்றேன். அப்படி படம் பண்ண முடியலன்னாலும் வேலைக்கு போய் எல்லாத்தையும் சரி பண்றேன் என சொல்ல பாக்யா போய் ஒழுங்கா முதல்ல சொன்ன இந்த படத்தை பண்ற வேலைய பாரு. குடும்ப விஷயத்தையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் எனக்கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Baakiyalakshmi Serial: கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா: வச்சு செய்த இராமமூர்த்தி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி