ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: அமிர்தாவுக்கு பச்சை துரோகம் செய்யும் எழில்: அதிர்ச்சியில் கோபி, ராதிகா.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் அமிர்தாவிடம் உண்மையை சொல்ல வந்து எதையும் கூறாமல் மறைத்து விடுகிறான் எழில்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 1 Feb 2023, 10:09 am
எழில் வர்ஷினியை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொன்ன பிறகு அமிர்தாவை சந்திக்க அவளது ஊருக்கே செல்கிறான். அவளை நேரில் சந்தித்து தட்டுத்தடுமாறி பேச முடியாமல் தவிக்கிறான். என்னாச்சு என அமிர்தா எவ்வளவு கேட்டும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறான். அமிர்தா பதறிக்கொண்டு, பாட்டி என்னை வேணாம்ன்னு சொல்றாங்களா? பரவாயில்லை எழில். நான் எவ்வளவு நாள் ஆனாலும் உங்களுக்காக காத்து இருப்பேன்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


நான் உங்களை முழுசா நம்புறேன் என கூறுகிறாள். இதனைக்கேட்டு எழில் கலங்கி போகிறான். நான் உங்க வாழ்க்கைல வந்து இருக்கவே கூடாது. இப்படியெல்லாம் நடக்கும்ன்னு சத்தியாமா நான் எதிர்பார்க்கல. என்னைப்பற்றி நீங்க எது கேள்விப்பட்டாலும் அது உண்மை தான். என்னை மன்னிச்சுடுங்க என சொல்கிறான். அமிர்தா ஒண்ணுமே புரியாமல் என்னாச்சு எழில்? எதுக்காக இப்படியெல்லாம் பேசுறீங்க என கேட்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

நான் என்னென்னமோ பேசணும்னு வந்தேன். ஆனா என்னால எதுவும் பேச முடியல மன்னிச்சிடுங்க நீங்க வீட்டுக்கு போங்க என சொல்ல அமிர்தா அவன் கைகளை பிடிக்கிறாள். எழில் அவள் கைகளை எடுத்துவிட்டு சதிஷுடன் கிளம்புகிறான். சதீஷ் என்னடா சொல்ல வந்ததை சொல்லாம கிளம்புற என கேட்க, எப்படி சொல்றது. என்ன இருந்தாலும் நான் அமிர்தாவுக்கு பண்ணது துரோகம். நீ கிளம்பு என சொல்ல அமிர்தா ஒண்ணுமே புரியாமல் கலங்கி நிற்கிறாள்.

அதன்பின்னர் வீட்டுக்கு வந்த எழிலிடம் பாக்யா உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா என கேட்க பாட்டி என்ன சொன்னாலும் ஒகே தான் என கூறிவிட்டு மேலே செல்கிறான். ஜெனியும் மாடிக்கும் வந்து, ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த குடும்பத்துக்காக நீங்க உங்க வாழ்க்கையை எதற்கு இப்படி தொலைக்கணும் இந்த வீட்டுக்காக ஏன் நீங்க இப்படி கஷ்டப்படணும் என கேட்கிறாள். என்னோட கல்யாணத்தால இந்த வீடு சந்தோஷமா இருக்கும்னா அது நடந்துட்டு போகட்டும்.

Bharathi Kannamma: கையும் களவுமாக சிக்கிய பாரதி: கண்ணம்மா சொன்ன விஷயம்.!

ஆனா தயவுசெஞ்சு இத அம்மா கிட்ட சொல்லிடாதீங்க எப்பவுமே அவங்களுக்கு தெரியக்கூடாது என கூறுகிறான். இதனிடையில் கோபி வீட்டுக்கு வரும் செழியன் எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவெடுத்து இருப்பதாக சொல்ல இனியா, கோபி, ராதிகா என மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இன்னைக்கு சாயங்காலம் நிச்சயதார்த்தம் நாளைக்கு கல்யாணம் என சொன்னதும் மூவரும் ஆடி போகின்றனர்.

Vijay Tv: இறுதியாய் தனது போராட்டத்தில் ஜெயித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!

உடனே கோபி, வேலையில்லாமல் இருக்கான் அதுக்குள்ள எதுக்கு அவனுக்கு கல்யாணம் என கேட்கிறான். அதற்கு செழியன் அந்த தயாரிப்பாளர் பொண்ணு எழிலை விரும்புறாங்க, இவனும் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்கனும் சொல்றான். அது பாட்டிக்கு பிடிக்கல அதனால அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைத்து இந்த கல்யாணத்தை உடனே நடத்த முடிவெடுத்து இருக்காங்க என சொல்லி கோபி,ராதிகாவை நிச்சயத்துக்கு அழைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்புகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி