ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: மெல்ல மெல்லமாக வெளிவரும் கோபியின் உண்மை முகம்: கடும் அதிர்ச்சியில் ராதிகா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்றைய எபிசோட்டில் தேர்தலில் ஜெயித்து கோபி, ராதிகாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுக்கிறாள் பாக்யா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 12 Dec 2022, 12:27 pm
செக்கரட்ரி எலக்ஷனில் நிற்கும் ராதிகா பேசும் போது, ஒரு குடும்பத்துக்கு சமைச்சு போட்டு பார்த்துக்கிறதும், ஏரியாவை மெயின்டெயின் பண்றதும் ஒன்னு இல்லை. அதுக்கு படிப்பறிவு எல்லாம் வேணும். என்னோட ஆபிஸ்ல எனக்கு கீழ 12 பேர் வேலை பார்க்குறாங்க. என்னால இந்த ஏரியா செக்கரட்ரி வேலையையும் ஈசியா பண்ண முடியும் என கூறுகிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இதனைக்கேட்டு பாக்யா கடுப்பாகிறாள். இராமமூர்த்தி அவளுக்கு பதில் சொல்கிறேன் என கூறும்போது, பாக்யா தடுக்கிறாள். அதன்பின்னர் செக்கரட்ரியும் கண்டிப்பா நீங்க தான் ஜெயிப்பீங்க மேம் என ராதிகாவிடம் கூறுகிறான். அதனை தொடர்ந்து மீட்டிங் முடிந்ததும் செல்வி வீட்டிற்கு சென்று ஈஸ்வரியிடம் நடந்த விஷயங்களை கூறுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கோபி சார் பாக்யா அக்காவுக்கு எதிரா அந்த ராதிகாவை நிற்க வைச்சு அந்த பேச்சு பேசுறாரு. அந்த ராதிகாவும் அக்கா படிக்கலன்னு நக்கலா பேசுது என கூறுகிறாள். இதனைக்கேட்டு ஈஸ்வரி உட்பட ஜெனி, செழியன் அனைவரும் ஷாக்காகின்றனர். உடனே ஈஸ்வரி நமக்கு இதெல்லாம் தேவையா? அதான் நான் ஆரம்பத்துலயே வேணாம்ன்னு சொன்னேன் என கூறுகிறாள்.

அதற்கு பாக்யா இனிமேலும் குட்ட குட்ட குனிய முடியாது அத்தை. என்ன ஆகுதுன்னு பார்க்கலாம் என சொல்கிறாள். செழியனும் நீ கண்டிப்பா ஜெயிக்கணும் என கூறுகிறான். இந்த தேர்தலில் ஜெயித்து கோபி, ராதிகா பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என யோசிக்கிறாள் பாக்யா. அதன்பின்னர் லோன் விஷயமாக வேறொரு பேங்கிற்கு அம்மாவை அழைத்து செல்கிறான் எழில்.

Bharathi Kannamma: இரவோடு இரவாக கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பாரதி.!

ஆனால் அங்கும் கோபியின் டாக்குமெண்ட் இல்லாமல் லோன் கொடுக்க முடியாது என கூறிவிடுகிறனர். இதனால் வருத்தப்படும் பாக்யா தனது கேட்டரிங்கில் வேலை பார்க்கும் பெண்கள் அனைவரையும் அழைத்து பணம் விஷயமாக பேசுகிறாள். ஆனால் அவர்களும் நம்மால் தனியாக எதுவும் பண்ண முடியாது என கூறிவிடுவதால் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் குழம்புகிறாள்.

Bharathi Kannamma: பயரு பயரு.. அதிரடி முடிவெடுத்த கண்ணம்மா: ஆடிப்போன பாரதி.!

இந்தப்பக்கம் இராமமூர்த்தி கோபி வீட்டில் உட்கார்ந்து பாக்யா எலக்ஷனில் நிற்பதற்காக நோட்டீஸ் அடிக்க ரெடி பண்ணி கொண்டிருக்கிறான். இதனைப்பார்த்து கடுப்பாகும் கோபி, இது என்னோட ராதிகாவோட வீடு. உங்க மருமகளுக்கு வேலை பண்ணனும்னா அந்த வீட்டுக்கு போய் பண்ணுங்க என சத்தம் போடுகிறான். அவன் பேசுவதை பார்த்து இனியாவும், ராதிகாவும் ஷாக்காகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி