ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: பாக்யா வீட்டில் நடந்த களேபரம்: படு கேவலமாக நடந்துக்கொண்ட கோபி.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் கோபி தூக்கி எறிந்த பாக்யாவின் பெயரை மீண்டும் வீட்டுக்கு முன்பாக மாட்டுகிறான் எழில்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 14 Jan 2023, 10:14 am
வீட்டுக்கு முன்பாக பாக்யவின் பெயரை பார்த்து ஆவேசமடையும் கோபி வீட்டுக்குள் போய் அப்பாவியம் தாம் தூம் என குதிக்கிறான். இராமமூர்த்தி அதையெல்லாம் காதில் வாங்காமல் இருக்கிறார். இதனால் மேலும் காண்டாகும் கோபி நேராக பாக்யாவின் வீட்டுக்கு செல்கிறான். அவளிடம் சத்தம் போட்டு என்ன நினைச்சுட்டு இருக்க. இப்படியெல்லாம் பண்ண உனக்கு அசிங்கமா இல்லையா என கண்டமேனிக்கு பேசுகிறான்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


பின்னாடியே வரும் இராமமூர்த்தி எதுக்குடா இப்ப இங்க வந்து கத்திட்டு இருக்க? மொத வெளிய போடா என சொல்கிறார். அதனையெல்லாம் கேட்காத கோபி, நீங்க பேசாம இருங்க அப்பா. எல்லாரும் சேர்ந்து தான என்னை அசிங்கப்படுத்துனீங்க என எகிறுகிறான். திட்டம் போட்டு அன்னைக்கு வீட்டை விட்டு அனுப்புன. நானும் அம்மா, என் பசங்களுக்குக்காக எதுவும் பேசாம வீட்டை விட்டு போனேன். ஆனா இப்ப வீட்டை என்கிட்ட இருந்து ஆட்டய போட பார்க்குற.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

உனக்கு அசிங்கமாவே இல்லையா? இந்த வீட்டு நான் லோன் வாங்கி இரத்தம் சிந்தி கட்டுனது. ஆனா நீ நோகாம வீட்டை ஆட்டைய போட பார்க்குறியா. அன்னைக்கு ஏதோ கோர்ட்ல எனக்கு எதுவுமே வேணாம்ன்னு வீர வசனம் பேசணும். இப்போ வீட்டு முன்னாடி உன் பேரை வைச்சு இருக்க. உனக்கு வெட்கமா இல்லை. சீக்கிரமே இதுக்கு முடிவு கட்றேன் என சொல்லி வெளியில் போய் பெயர் பலகையை எடுத்துட்டு வந்து எறிகிறான்.

அதன்பின்னர் கோபி தனது வீட்டுக்கு போக நம்ம இந்த வீட்டை விட்டு நம்மோட சொந்த வீட்டுக்கு போயிருவோம் கோபி. இங்க நிம்மதியே இல்லை என சொல்ல, நானும் ஒதுங்கி ஒதுங்கி போனா இந்த பாக்யா ரொம்ப பண்றா. இப்ப நான் நினைச்சா கூட அவளை வீட்டை விட்டு அனுப்ப முடியுமா? என கொதிக்கிறான். அதற்கு அவள் உங்களால அதெல்லாம் பண்ண முடியாது என சொல்கிறான். அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது, பாக்யா அவனுக்கு பணம் அனுப்புகிறாள்.

Vijay Tv: எனக்கும் பாண்டிக்கும் தொடர்பு இருக்குறது உண்மை தான்: அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா!

இந்தப்பக்கம் எழில் வந்து அந்தாளு ரொம்ப பண்றாரு. நமக்கு நஷ்ட ஈடு கேட்போம் என சொல்கிறான். இதனால் கோபமடையும் ஈஸ்வரி, இந்த வீட்ல சண்டை நடந்துட்டே இருக்கனுமா. பேசாம இருக்க மாட்டியா என சொல்கிறாள். அதற்கு இராமமூர்த்தி, என்ன ஈஸ்வரி உன் பையனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற. எழில் பேசுறதுல என்ன தப்பு இருக்கு என்கிறார். அதன்பின்னர் மறுபடியும் எழில், பெயர் பலகையை எடுத்துட்டு வந்து வீட்டுக்கு முன்பாக மாட்டுகிறான்.

Baakiyalakshmi Serial: கோபியை சீண்டிய எழில்: பாக்யா வீட்டில் வெடித்த பூகம்பம்

பாக்யா பணம் அனுப்பியதால் கடுப்பாகும் கோபி மறுபடியும் வீட்டுக்கு வருகிறான். பெயர் பலகையை பார்த்து கடுப்பாகி உள்ளே வந்து எழிலிடம் பெயரை மாட்டிட்டா, இந்த வீடு உன் அம்மா பெயர்ல வந்துடுமா. இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்துருக்கேன் என சொல்லி, இராமமூர்த்தியையும், செழியனை வர சொல்கிறான். அனைவரும் வந்த பிறகு இந்த வீட்டை நான் விற்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் என்கிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி