ஆப்நகரம்

வீட்டை விட்டு வந்த கையோடு காதலியை சந்தித்த கோபி: கதறி அழும் பாக்யா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 19 Aug 2022, 9:38 am
கோபி வீட்டை விட்டு கிளம்பியதும் அனைவரும் பாக்கியாவிற்கு எதிராக திரும்புகின்றனர். இதனை நினைத்து அவள் சோகமாக கிச்சனில் இருக்க, செல்வி வந்து அவளிடம் நீ பண்ண எதுவுமே தப்பு இல்லக்கா. சார் போனதுல எனக்குலாம் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை என சொல்கிறாள். உடனே உடைந்து அழும் பாக்கியா, நான் அவரை வீட்டை விட்டுலாம் போக சொல்லலை. உனக்கே தெரியும்ல எனக்கு அவரை எவ்வளவு பிடிக்கும்ன்னு.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இனிமே ஒண்ணுமே இல்லன்னு ஆனா பிறகு தான் அவரோட ஒரே ரூம்ல வாழ முடியாதுன்னு அவரை டிரெஸ் எல்லாம் ஒரு பேக்ல வைச்சேன். இது என் குடும்பம் செல்வி. இனியாவை விட்டுட்டு நான் எங்க போவேன். இந்த குடும்பத்தை நான்தானா பார்த்துக்கணும். ஆனா அத்தை என்கூட பேச மாட்டேன் சொல்லிட்டாங்க. இனியாவும் என்னை பிடிக்கலன்னு சொல்லிட்டா என சொல்லி அழுகிறாள். அவளை சமாதானம் செய்கிறாள் செல்வி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் ஈஸ்வரி நடந்ததையெல்லாம் சொல்லி மூர்த்தியிடம் புலம்புகிறாள். இந்த பாக்யா கொஞ்சமாவது பொறுமையா இருந்து இருக்கலாம் என அவள் சொல்ல, அவ ஏற்கனவே ரொம்ப மனசு உடைஞ்சு போயிருப்பா. நீயும் எதுவும் பேசிட்டு இருக்காதா என சொல்கிறாள். இப்போ கோபி வெளிய போயிட்டான். அவனுக்கு போக இடமா இல்லை. நேரா அந்த ராதிகா வீட்டுக்கு தான் போவான் என கூறுகிறாள்.

அதற்கு கோபியின் அப்பா நீ ரொம்ப யோசிக்காத. நான் அவ்வளவு தூரம் எல்லாம் போக விட மாட்டேன் என கூறுகிறாள். ஈஸ்வரியும் இந்த ஜென்மத்துல பாக்யாவும், கோபியும் தான் புருஷன் பொண்டாட்டி. அதை மாத்த யாராலும் முடியாது என கூறுகிறாள். இதனிடையில் ராதிகாவின் அண்ணன் என்ன முடிவு எடுத்துருக்க என அவளிடம் கேட்க, மயூவுக்கு உடம்பு சரியாகிருச்சு. ஊருக்கு கிளம்பனும் என கூறுகிறாள்.

Bharathi Kannamma: வெண்பாவுக்கு மாலை போட்ட பாரதி: கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.!

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போது கோபி அங்கு வருகிறான். அவனிடம் வீட்டுக்கு போனீங்களா? என்னாச்சு என ராதிகாவின் அண்ணன் கேட்க, நான் வீட்டை விட்டு வந்துட்டேன். காலைல இருந்து எங்க போறதுன்னு தெரியாம கார்லயே சுத்திட்டு இருக்கேன். இப்போ எனக்குன்னு யாருமே இல்லை என அவன் சொல்ல, ராதிகா அதிர்ச்சியடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி