ஆப்நகரம்

கோபத்தில் மசாலா மெஷினை நொறுக்கிய கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா வயசு கோளாறில் செய்த தவறுக்காக பாக்யா மீது கோபத்தை காட்டுகிறார் கோபி.

Samayam Tamil 8 Apr 2021, 7:14 pm
வீட்டுக்கு வராமல் நண்பரின் வீட்டில் இருந்த இனியாவை வீட்டுக்கு அழைத்து வந்த பிறகு அவர் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அவரை சமாதானப்படுத்தி கோபி மற்றும் பாக்யா இருவரும் அழைத்து செல்கின்றனர்.
Samayam Tamil baakiyalakshmi serial update gopi destroys baakiyas masala equipment
கோபத்தில் மசாலா மெஷினை நொறுக்கிய கோபி.. பாக்கியலட்சுமி சீரியலில் இன்று



கெஞ்சிய பிறகும் டிசி கொடுத்த பிரின்சிபல்

இனியா தேர்வு எழுதாமல் ஒரு பையனுடன் சினிமாவுக்கு போயிருக்கிறாள் என தலைமை ஆசிரியர் கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைகிறார் பாக்யா. அங்கேயே இனியவை திட்டி அடிக்கிறார்.

இந்த ஒரு முறை மட்டும் மன்னித்து விடுங்கள் என கோபி, பாக்கியலட்சுமி இருவரும் கெஞ்சி கேட்கும் அவர் கேட்கவில்லை. 'இப்படி ஒரு பெண்ணை பெற்றதற்கு நீங்கள் தான் அவமானப்படணும். 14 வயதில் இப்படி தப்பு பண்ண எங்கே இருந்து தைரியம் வந்தது. வீட்டில நீக்க என்ன தான் பண்ணிட்டு இருக்கீங்க. பொண்ணு என்ன பண்றா அப்படினு கூட கவனிக்க மாட்டிங்களா' என திட்டி கையில் டிசியை கொடுக்கிறார் அவர்.

கண்ணீர் விட்ட பாக்யா

9ம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு டிசி கொடுத்தால் வேறு எங்கும் சீட் கிடைக்காது என சொல்லி அழுது கெஞ்சுகிறார் பாக்யா. ஆனால் கோபி போகலாம் வா என சொல்லி அவரை அழைத்துக்கொண்டு வெளியில் வருகிறார்.

வீட்டிற்கு வந்தபின் அனைவரும் என்ன ஆனது என கேட்கிறார்கள். பாக்யா அழுது புலம்புகிறார். எல்லாம் முடிந்துவிட்டது என சொல்லி அழுகிறார். மற்றவர்களும் டிசியை வாங்கி பார்த்துவிட்டு கடும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா சினிமாவுக்கு போனது பற்றி சொன்னதற்கு மேலும் அதிர்ச்சி அடைகின்றனர்.

நீயா இப்படி செஞ்ச என இனியாவை திட்டுகின்றனர்.

நீதான் காரணம் பாக்யா

அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது கோபி, 'இனியா இப்படி மாறியதற்கு நீ தான் காரணம் பாக்யா என கூற அவர் அதிர்ச்சி ஆகிறார். நான் என்ன செய்தேன் என கேட்கிறார். 'எப்போது நீ குடும்பத்தை பார்க்காமல் மசாலா கம்பெனி என போனியோ, அப்போதே எல்லாம் நாசமாய் போச்சு என திட்டுகிறார் கோபி.

ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் பாக்யாவை திட்டுகிறாய் என அனைவரும் கேட்கின்றனர்.

மசாலா கம்பெனியை நொறுக்கும் கோபி

அதன் பின் கோபமாக மாடிக்கு செல்லும் கோபி அங்கு மிகவும் கோபமாக மசாலா அரைக்கும் இடத்தை நொறுக்குகிறார். எழில் கோபத்துடன் தடுக்கும் அவர் கேட்கவில்லை.

மற்றவர்கள் அமைதியாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். 'எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனி குடும்பத்தை மட்டும் பாரு' என ஆவேசமாக சொல்லிவிட்டு கிளம்புகிறார் கோபி.

அவன் சொல்வதை கேளு என தாத்தாவும் பாட்டியும் பாக்யாவுக்கு அட்வைஸ் கொடுக்கின்றனர்.

அடுத்த செய்தி