ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபி செய்த துரோகங்கள்: பாக்யா எடுக்க போகும் முடிவு என்ன.!

பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 5 Jul 2022, 9:10 am
கோபி, ராதிகாவின் உறவை பற்றி தெரிந்த பாக்யா அதிர்ச்சியில் ஒரு வார்த்தை கூட பேசாமல் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறாள். கோபி தன்னிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நினைத்து பார்க்கிறாள். ராதிகாவை பற்றிய பேச்சு எடுக்கும் போதெல்லாம் கோபி எரிந்து விழுந்ததையும், அவளை பற்றி ஒன்னுமே தெரியாது என்று அவன் பேசியதையும் நினைத்து பார்க்கிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


மேலும் ராதிகா நல்ல இருக்க வேண்டும் என்று அவளிடம் சொன்னதையும், அவள் புதிதாக கல்யாணம் பண்ண போறவரை பற்றி சொன்னதையும் நினைத்து பார்க்கிறாள். மழையில் நனைந்து கொண்டு பாக்யா நடுரோட்டில் நடந்து வர, அனைவரும் சத்தம் போடுகின்றனர். இதனிடையில் ஹாஸ்பிட்டலில் இருந்து கண் விழிக்கிறான் கோபி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவனிடம் நர்ஸ் ஒருவர் வந்து உங்க மனைவி ராதிகா கிளம்பிட்டாங்களா என கேட்க, ஆமா வீட்ல குழந்தை தனியா இருப்பா. அதான் அனுப்பி வைச்சுட்டேன் என சொல்கிறாள். அப்போது இன்னொரு மனைவி என்று பாக்யா வந்ததை சொல்லலாம என யோசிக்கும் நர்ஸ், அவுங்க குடும்ப விவகாரம் நமக்கு எதுக்கு என யோசிச்சு அமைதியாகிவிடுகிறாள்.

அதன்பின்னர் கோபி போனை சார்ஜ் போட சொல்லி வாங்கும் போது, வீட்டிலிருந்து நெறைய போன் கால், மெசேஜ் வருவதை பார்க்கிறான். உடனே செழியனுக்கு போன் பண்ணி ஆக்ஸிடென்ட் ஆனதை சொல்ல, வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அவனிடம் அட்ரஸ் வாங்கி கொண்டு, செல்வியை தாத்தாவை பார்த்துக்க சொல்லிவிட்டு கிளம்பி வருகின்றனர்.

VJ Chitra: உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை: விஜே சித்ராவின் தந்தை பகீர் புகார்.!

அங்கு வந்து அனைவரும் அவனை பார்த்து பதற, அம்மா திடீர்ன்னு போன் பண்ணி வர சொன்னாங்களா, அதான் டென்ஷன்ல வண்டி ஓட்டிட்டு டிவைடர்ல விட்டுட்டேன் என சொல்கிறாள். உடனே ஈஸ்வரி என்னால தான் எல்லாம் எனஅழுக, என்னாச்சும்மா அவசரமா வர சொன்னீங்க. அப்பா நல்லா இருக்காங்கள்ள என கேட்கிறான்.

அப்போது இனியா நடந்ததை சொல்ல வர்ற, ஈஸ்வரி அவளை தடுத்துவிடுகிறாள். மொத கோபி வீட்டுக்கு வரட்டும். அதுக்கப்புறம் பேசிக்கலாம் என சொல்கிறாள். இதனிடையில் வீட்டில் சத்தியமூர்த்தி வாசலில் அமர்ந்திருக்க, பாக்யா பேயறைந்ததை போல் வருகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி