ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: இரக்கமே இல்லாமல் பேசிய கோபி: ஆடிப்போன இராமமூர்த்தி.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் கோபி பணத்தை கேட்டு நாளைக்கே வீட்டை காலி பண்ண சொல்ல போவதாக இராமமூரத்தியிடம் கூறுகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 14 Feb 2023, 10:15 am
எழிலும், அமிர்தாவும் உணர்ச்சிபெருக்கில் நன்றி சொல்கின்றனர். எழிலும் இந்த வீட்ல எவ்வளவோ பிரச்சனை நடந்துட்டு இருக்கு. அதையெல்லாம் தாண்டி நீ எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சு இருக்க. ரொம்ப நன்றிம்மா என்கிறான். அதற்கு பாக்யா, பிடிக்காத கல்யாணத்துக்கு ரெடியாகி மணமேடைல உட்கார்ந்து இருந்த. உனக்காக நைட்டோட நைட்டா அமிர்தா கிளம்பி வந்தாள். அப்பறமா இந்த கல்யாணம் நடந்தது.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


ஆனா இனிமே தான் நிஜமான சவால் எல்லாம் உங்களுக்கு இருக்கு. நீங்க அடுத்து என்ன பண்ண போறீங்கன்றதை எல்லாரும் பார்ப்பாங்க. நீங்க மட்டும் நல்லா வந்துட்டா, உங்களை போல காதல் பண்ற பலருக்கு இது உத்வேகமா இருக்கும். இனிமே வாழ்க்கைல என்ன பண்றதுன்னு பாருங்க என அட்வைஸ் பண்ணுகிறாள் பாக்யா. மேலும் அமிர்தாவிடம், ஜெனி கல்யாணம் நடந்து வரும் போதும் பிரச்சனை இருந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதையெல்லாம் தாண்டி அவதான் இந்த வீட்டுக்கு இன்னைக்கு செல்லம். அதே மாதிரி நீயும் எல்லாருக்கும் செல்லம் ஆகணும் என்கிறாள். அமிர்தாவும் நீங்க சொல்ற எல்லாமே புரியுதும்மா. கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி நடந்துப்பேன் என்கிறாள். அதன்பின்னர் பாக்யா அவர்களை தனது அறையில் தங்க வைக்கிறாள். எழில் அமிர்தாவிடம் நீங்க என்மேல கோபமா இருக்கீங்களா? பணத்துக்காக கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு என கேட்கிறாள்.

அமிர்தா அதெல்லாம் இல்லை. எனக்கு உங்க நிலைமை புரிஞ்சது என சொல்கிறாள். மறுநாள் எழில் தனது பாட்டியிடம் பேச முயற்சி செய்கிறான். ஆனால் அவள் பேசாமல் திட்டுகிறாள். கோபி நாளைக்கு வந்து வீட்டை காலி பண்ண சொல்லுவான். இந்த குடும்பம் சின்னா பின்னமா சிதற போகுது. சந்தோஷமா இரு என சொல்ல பாக்யா வேற வீடு பார்த்துவிட்டதாக சொல்கிறாள். ஆனால் செழியன் நான் உங்ககூட வரமாட்டேன் என கூறுகிறான்.

Baakiyalakshmi Serial: ஈஸ்வரியை மீறி வீட்டுக்குள் நுழைந்த எழில், அமிர்தா: செழியன் எடுத்த முடிவு.!

அதற்கு ஜெனி நான் உங்க கூட வருவேன் ஆன்ட்டி என சொல்கிறாள். உடனே ஈஸ்வரி உன்னை அவன்கூட வாழத்தான் கல்யாணம் பண்ணி வைச்சது. உன் மாமியார் கூட சேர்ந்து சுத்த இல்லை என்கிறாள். நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது நடக்க போகுது என ஈஸ்வரி கோபப்பட்டு உள்ளே சென்றுவிடுகிறாள். இராமமூர்த்தி எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக இருக்க, பாக்யா அருகில் போய் பார்த்துக்கலாம் மாமா என்கிறாள். அதற்கு அவர் பிள்ளையார் சுழி போட்டது என் புள்ள என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என விரக்தியுடன் கூறுகிறார்.

Vijay Tv: எப்புட்றான்னு கேட்க போகும் மீனா: மரண பயத்தில் தனம்.!

அதன் பிறகு இனியா தாத்தாவிடம் நம்ம வீட்டுக்கு போயிடலாமா என கேட்க அங்கு வரும் கோபி டாடியை விட்டு எங்கும் போகக்கூடாது என சொல்கிறான். ராமமூர்த்தியிடம் நான் கொடுத்த கெடு இன்னையோட முடியுது நாளைக்கு போய் நிற்பேன், பணத்தை கேட்பேன் வீட்டை காலி பண்ண சொல்லுவேன். அம்மா என்கூட வந்துடுவாங்க. செழியன், ஜெனிக்கு பண்ண வேண்டியதை பண்ணுவேன் என சொல்ல இனியா, ராமமூர்த்தி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி