ஆப்நகரம்

பாக்யா கண்களில் சிக்கிய மயூ: கொலை வெறியுடன் கோபியை தேடும் இராமமூர்த்தி.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 28 Sep 2022, 9:55 am
கோபி அனைவரும் மண்டபத்திற்கு வந்துவிட மற்றொரு பக்கம் சமையல் வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறாள் பாக்யா. அதன்பின்னர் கோபி, ராதிகா இருவரும் அறைக்கு சென்றுவிட பாக்யா தனது ஆட்களுடன் அனைவருக்கும் காபி கொடுப்பதற்காக கீழே வருகிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


ராதிகா அம்மா ஒரு பக்கம் நிற்க பாக்யா வந்தவர்களுக்கு காபி கொடுத்து கொண்டிருக்கிறாள். அவள் அண்ணனுக்கு பாக்யா யாரென்று தெரியாததால் அவன் அவளிடம் பேசி கொண்டிருக்கிறாள். அதன்பின்னர் பாக்யா மாடிக்கு சென்றுவிட, செல்வியிடம் ராதிகாவின் அண்ணி மாப்பிள்ளை, பொண்ணுக்கு ஜுஸ் கொண்டு போய் கொடுக்க சொல்வதாக கூறுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வேறொரு பெண் ராதிகா அறைக்கு போக, கோபி அறைக்கு செல்வி ஜுஸ் எடுத்து கொண்டு செல்கிறாள். அவன் உள்ளே ஜாலியாக விசிலடித்து கொண்டிருக்க, செல்வி ரூம் கதவை தட்டாமல் வெளியில் நிற்கிறாள். அப்போது அங்கு வரும் கோபியின் நண்பர் ஒருவர் நானே கொடுத்துறேன் என கூறுகிறாள்.

மற்றொரு பக்கம் கோபியின் கல்யாணம் நடக்கும் ஏரியா தெரிந்து அங்கு ஆட்டோவில் வருகிறார் ராமமூர்த்தி. எந்த மண்டபம் என தெரியவில்லை. அந்த ஏரியாவில் இருக்கும் மண்டபம் அனைத்திற்கும் செல்லும்படி கூறுகிறார். இந்தப்பக்கம் கோபி, ராதிகாவின் ரிசப்ஷன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

Bharathi Kannamma: மீண்டும் சேர்வதை பற்றி யோசித்த பாரதி: கண்ணம்மா போட்ட கண்டிஷன்.!

அதன்பின்னர் பந்தியும் ஆரம்பிக்க பாக்யாவின் ஆட்கள் சாப்பாடு வைக்க ஆரம்பிக்கின்றனர். அப்போது மயூ ஹாட் வாட்டர் வேணும் என மாடிக்கு வருகிறாள். அங்கு பாக்யா சமைத்து கொண்டிருக்கு மயூ, அவளை பார்த்து ஆண்டி என கூப்பிடுகிறாள். பாக்யாவும் அவளை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி