ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபியை சீண்டிய எழில்: பாக்யா வீட்டில் வெடித்த பூகம்பம்

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் கோபி பெயர் இருந்த இடத்தில் பாக்யாவின் பெயர் பலகையை மாட்டுகிறான் எழில்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 13 Jan 2023, 10:27 am
பாக்யா காலையில் வாக்கிங் செல்லும் போது செல்வியையும் அழைத்து கொண்டு வேகமாக நடக்க சொல்கிறாள். அப்போது எதிரில் வரும் கோபி தனக்கருகில் இருப்பவரிடம், நானும் வாக்கிங் போறேன்னு சொல்லிட்டு கதை பேச வந்துட்டாங்க. இதுக்கு வீட்ல உட்கார்ந்து கதை பேசலாம்ல என நக்கலாக பேசவிட்டு போகிறான். அதன்பின்னர் மீண்டும் கோபியை எதிரில் சந்திக்கிறாள் பாக்யா.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


அந்த சமயத்தில் தனது கூந்தலை கலைத்து விட்டு ஸ்டைல் காண்பிக்கிறாள். இதனை பார்த்து உறைந்து போகிறான் கோபி. சிலரெல்லாம் பிபி சுகர்ன்னு ஓடிட்டு இருக்காங்க செல்வி. நம்மள மாதிரி ஆரோக்கியமா இருக்குறதும் வரம் தான என கோபிக்கு பதிலடி கொடுக்கிறாள் பாக்யா. உடனே அவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து ஓடி விடுகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் தனது நண்பனை சந்தித்து பாக்யாவை பற்றி பேசி புலம்பி தள்ளுகிறான். நீதான் அவளை விட்டுட்டு வந்துட்டீலா? அப்பறம் உனக்கு என்ன கவலை என பதிலுக்கு கேட்கிறான். கோபி எதுவும் பேச முடியாமல் தவிக்கிறான். இந்தப்பக்கம் எழில், தனது வீட்டில் கோபி பெயர் இருந்த இடத்தில் பாக்கியலட்சுமி பெயரை வைக்கிறான். இராமமூர்த்தியும் அங்கு வந்து, என் மருமகளை பெயரை இங்க பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கூறுகிறார்.

எழிலும், இங்க உங்க பேர் இல்லன்னா பாட்டி பெயரை போடலாம்ன்னு தான் பார்த்தேன் தாத்தா. ஆனா அம்மா பெயரை பார்த்தா தான் காண்ட் ஆவார். அதுனால தான் அம்மா பெயர் வைச்சேன் என்கிறான். அதன்பின்னர் இருவரும் அங்கு நின்று செல்பி எடுக்கிறான். அதனை தொடர்ந்து வீட்டுக்கு வந்து காரை விட்டு இரங்கும் கோபி, பாக்யாவின் பெயரை பார்த்து செம்ம கடுப்பாகிறான்.

Vijay Tv: எனக்கும் பாண்டிக்கும் தொடர்பு இருக்குறது உண்மை தான்: அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா!

கடும் கோபத்துடன் வீட்டுக்கு போக இராமமூர்த்தி தூங்கி கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி, என்ன நடக்குது அந்த வீட்ல. அது என்னோட வீடு. அப்படி இருக்கும் போது என் பெயரை எடுத்து அந்த பாக்யா பெயரை போட்டுக்க வெக்கமா இல்லை. நான் நினைச்சா இப்பவே அந்த வீட்டை விட்டு பாக்யாவை வெளிய அனுப்ப முடியும் என காட்டு கத்து கத்துகிறான். அவனுடைய அப்பா எதையும் கட்டுக்காமல் மறுபடியும் படுத்து கொள்கிறார்.

Baakiyalakshmi Serial: ராதிகாவை ஓட விட்ட செல்வி: பாக்யாவின் புதிய அவதாரம்.!

இதனால் மேலும் கடுப்பாகும் கோபி நேராக பாக்யா வீட்டுக்கு போகிறான். தாத்தாவும் பின்னாடியே செல்கிறார். இந்த வீடு என் பேர்ல இருக்கு. லோன் வாங்கி கஷ்டப்பட்டு வீட்டை கட்டி இருக்கேன். பிளான் பண்ணி என்ன வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்ட. நான் உனக்காக ஒன்றும் இந்த வீட்டை விட்டு வெளியே போகல என் அம்மாவுக்காகவும் குழந்தைகளுக்காகவும் தான் போனேன். அப்படியே இந்த வீட்டை உன் பெயருக்கு ஆட்டைய போட்டுடலாம் பாக்குறியா என கோபமாக சண்டை போடுகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது,
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி