ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: பாக்யா செய்த தரமான சம்பவம்: புலம்பி தவிக்கும் கோபி.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 4 Aug 2022, 9:42 am
செழியன் மற்றும் ஜெனி இருவரும் ரூமுக்குள் இப்படியெல்லாம் நம்ப குடும்பத்துல நடக்கும்ன்னு கொஞ்சம் கூட நெனச்சி பாக்கல என பேசிக்கொள்கின்றனர். அப்பா தான் அப்படி பண்ணாருன்னா அம்மா அவசரப்பட்டு கோர்ட்டுக்கு கிளம்பி போயிட்டாங்க என்ன பண்ண போறாங்கன்னு புரியல எனக்கு ரொம்ப பயமா இருக்கு என செழியன் சொல்ல ஜெனி பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரயல்


அப்போது செழியன் இந்த விஷயம் பற்றி இப்போதைக்கு உங்க வீட்ல சொல்லாத. தப்பா எடுத்துப்பாங்க எனக்கூற, நான் சொல்ல மாட்டேன். அவுங்களுக்கா தெரிஞ்சா எதுவும் பண்ண முடியாது என கூறுகிறாள். அதன் பிறகு இனியா ஒரு பக்கம் படிக்கட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். செழியன், ஜெனி இருவரும் வெளியில் வந்து அவளை சமாதானம் செய்கின்றனர்.

இனியா அவர்களிடம் அப்பா கூட பரவாயில்லை. நம்மக்கூடயே இருக்குறேன்னு சொன்னாரு. ஆனா அம்மா என்னைப்பற்றி யோசிக்காம போயிட்டாங்க. என்மேல பாசமே இல்லை என சொல்ல, ஜெனி ஆண்டிக்கு உன்மேல பாசம் அதிகம். கோபத்துல இப்படி பண்றாங்க. சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவாங்க என சமாதானம் சொல்கிறாள். இந்தப்பக்கம் எழில், இவ்வளவு பெரிய முடிவு எடுத்துருக்கியே உனக்கு பயமே இல்லையா என கேட்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதற்கு பாக்யா, இதுவரை என் வாழ்க்கைல நான் எந்த முடிவும் தனியா எடுத்தது இல்லை. இப்போ தான் சுயமரியாதை முக்கியம்ன்னு ஒரு முடிவு பண்ணிருக்கேன். அதுவும் இல்லாம நீயும் கூட இருக்க என சொல்கிறாள். இதனிடையில் காரில் கோர்ட்டுக்கு போகும் கோபி, பாக்யாவை நினைத்து புலம்பி கொண்டே வருகிறான். எவ்வளவு திமிரு. நானே அவ்வளவு யோசிச்சு டைவர்ஸ் கொடுத்தேன். ஆனா ரெண்டு நாள்ல இவ முடிவு எடுக்குற என கோபத்தில் கொந்தளிக்கிறான்.

இதனிடையில் வீட்டில் ஈஸ்வரி மற்றும் அவருடைய கணவர் முர்த்தி இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி பாக்கியா மீது கோபத்தோடு பேச இதுக்கெல்லாம் கோபி தான் காரணம் என சொல்கிறார் அவளது கணவர். இந்த நேரத்தில் அங்கு வரும் செல்வி அக்கா இந்த குடும்பம் தான் உலகம் இருந்துச்சு அப்படி இருக்கும் அவுங்களுக்கு பச்சை துரோகம் பண்ணா எப்படி இருக்கும் என பேசுகிறாள்.
‌‌
இந்த ராதிகா தான் நல்லா இருந்த குருவி கூட்டை கலைச்சு விட்டாங்க என ஈஸ்வரி கோபப்பட, ஆமா உன் பையன் ஒண்ணுமே தெரியாத சின்ன பாப்பா என கூறுகிறார் மூர்த்தி. உடனே ஈஸ்வரி செல்வியை ராதிகா வீட்டுக்கு போகலாம் என அழைக்க, அதெல்லாம் வேணாம் மொத பாக்யா கோபியை பார்க்கலாம் என கூறுகிறார் மூர்த்தி. ஆனால் அதை கேட்காமல் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Priyanka Deshpande: தளபதி விக் பற்றி பேசிய பிரியங்கா: திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.!

அடுத்த செய்தி