ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபி இவ்வளவு மோசமானவரா.?: கதறி அழுத பாக்யா..!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 29 Nov 2022, 10:10 am
இனியாவின் பள்ளி வாகனம் ஆக்சிடென்ட் ஆன விஷயம் தெரிந்து கோபி ஸ்கூலுக்கு கிளம்புகிறான். பாக்யாவுக்கு நிகிதாவின் அம்மா போன் செய்து பேசுகிறார். குழந்தைங்க பிக்னிக் போன பஸ் ஆக்சிடென்ட் ஆனதா வீட்ல இருந்து போன் வந்துச்சு. நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன். அதான் உங்களுக்கு போன் பண்ணேன் என கூறுகிறார். இதனைக்கேட்டு பாக்யா அதிர்ச்சியடைகிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அவள் பதட்டத்துடன் போன் பேசுவதை பார்த்து என்னாச்சு என விசாரிக்கின்றனர் வீட்டிலுள்ளவர்கள். பாக்யா இனியாவுக்கு ஆக்சிடென்ட் ஆனா விஷயத்தை சொல்லி, எழிலை அழைத்து கொண்டு ஸ்கூலுக்கு கிளம்புகிறாள். ஆனால் அதற்குள் ஸ்கூலுக்கு வந்துவிடும் கோபி, இனியா பற்றி விசாரிக்கிறான். அவள் நல்லா இருப்பதாகவும், டாக்டர் அனைவரையும் செக்கப் பண்ணி கொண்டு இருப்பதாகவும் கூறுகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மற்றொரு பக்கம் எழிலுடன் வரும் பாக்யா இனியா பற்றி மற்றொரு ஆசியரிடம் விசாரிக்கிறாள். அவளிடமும் குழந்தைகளை டாக்டர் செக்கப் பண்ணி கொண்டிருப்பதாகவும், அவர் பார்த்த பிறகு கையோட கூட்டிட்டு போகலாம் என்றும் கூறுகிறார். டாக்டர் செக்கப் பண்ணி கொண்டிருக்கிறார் என டீச்சர் கூறியதும் பாக்யா அதிர்ச்சியடைகிறாள்.

அதற்குள் அவர்களை பார்த்துவிடும் கோபி, இதுதான் சாக்குன்னு இனியாவை உன்கூட கூட்டிட்டு போகலாம்ன்னு பார்க்குறியா? இனியா என்னோட பொண்ணு என சொல்லிவிட்டு இனியாவை ஸ்கூல் பின்புறமாக அழைத்து கொண்டு சென்றுவிடுகிறான். பாக்யா இன்னொரு டீச்சரிடம் விசாரிக்கும் போது, அவள் கோபியுடன் கிளம்பிவிட்டதாக கூறிவிடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாக்யா வெளியில் வந்து பார்க்கும் போது கோபியின் கார் கிளம்பிவிடுகிறது.

Bharathi Kannamma: கண்ணம்மாவை நிரந்தரமாய் பிரிய போகும் ஹேமா: வெண்பாவின் சதித்திட்டம்..!

பாக்யா பின்னாடியே ஓடி வருவதற்குள் கார் கிளம்பிவிடுகிறது. பாக்யா இனியாவை பார்க்க வேண்டுமென்று கதறி அழுகிறாள். எழில் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்காமல், வேணும்னே அவர் இனியாவை கூட்டிட்டு போயிருக்காருடா. என் பொண்ணை பார்க்குற உரிமை கூட எனக்கு இல்லையா என கேட்கிறாள். அவளிடம் போன் பண்ணி பேச வைப்பதாக கூறி அழைத்து செல்கிறான் எழில்.

அதன்பின்னர் வீட்டுக்கு வந்ததும் பாக்யா நேராக கோபி வீட்டுக்கு கிளம்பி செல்கிறாள். எழில் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் கோபி வாசலுக்கு செல்கிறாள். அங்கு ஹாலில் அமர்ந்திருக்கும் இராமமூர்த்தியிடம், இனியாவை பார்க்கணும் மாமா என கூறுகிறார். அவள் குரலை கேட்டு அதிர்ச்சியடையும் கோபி, இனியாவை அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என சொல்லிவிட்டு வந்து பார்க்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Bharathi Kannamma: ஹேமாவை நெருங்கிய கண்ணம்மா: பாரதி எடுத்த அதிரடி முடிவு.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி