ஆப்நகரம்

Baakiyalakshmi serial: ராதிகாவுடன் கோபி.. பைக்கில் வரும் எழிலை பார்த்து அதிர்ச்சி! ஆனால் இறுதியில் ஒரு ட்விஸ்ட்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி அவரது சொந்த வீட்டின் முன்பே ராதிகா முன்பு நிற்கிறார். அந்த நேரத்தில் எழில் பைக்கில் வர பதறிவிடுகிறார்.

Samayam Tamil 13 May 2021, 8:46 pm
ராதிகாவின் மகளை அழைத்து வர கோபி அவரது வீட்டுக்கு வெளியிலேயே நிற்கிறார். ராதிகா உடன் அவர் கார் அருகில் நிற்கும் போது எழில் பைக்கில் அங்கு வருகிறார்.
Samayam Tamil baakiyalakshmi serial update gopi shocked on seeing ezhil
Baakiyalakshmi serial: ராதிகாவுடன் கோபி.. பைக்கில் வரும் எழிலை பார்த்து அதிர்ச்சி! ஆனால் இறுதியில் ஒரு ட்விஸ்ட்



மயூவை அழைத்து வரும் ராதிகா

கோபியை அழைத்துக்கொண்டு காரில் பாக்யாவின் வீட்டுக்கு செல்கிறார் ராதிகா. அங்கு கோபி வெளியில் இருந்துகொண்டு ராதிகாவை உள்ளே அனுப்புகிறார். அங்கு சென்று ராதிகாவிடம் புது வீடு இங்கு அருகிலேயே வாங்கிவிடு என பாக்யா மற்றும் குடும்பத்தினர் சொல்கிறார்கள். அதன் பின் குடிக்க ஜூஸ் கொண்டு வருகிறேன் என பாக்யா சொல்லும்போது தான் நண்பர் ஒருவர் வெளியில் காத்திருப்பதாக சொல்கிறார் ராதிகா.

அவரையும் உள்ளே வர சொல்வது தானே என பாக்யா சொல்ல, ராதிகா எதோ சொல்லி சமாளிக்கிறார். அதன் பின் குழந்தையை அழைத்து கொண்டு கிளம்புகிறார். நாங்களும் வெளியில் வருகிறோம் என பாக்யா சொல்ல வேண்டாம் என சொல்கிறார் ராதிகா. (வந்திருந்தால் கோபி சிக்கி இருப்பாரே).

எழிலை பார்த்து பதறிய கோபி

கோபி வெளியில் ராதிகா உடன் நின்றிருக்கும் பொது எழில் பைக்கில் வருகிறார். அவரை பார்க்க வேண்டும் என மயூ கூப்பிடுகிறார். ஆனால் எழில் கண்டுகொள்வதில்லை. அமிர்தா அப்பா சொன்ன விஷயத்தால் அவர் கடும் அதிர்ச்சியாக இருந்தார். அதனால் பைக்கை நேராக வீட்டுக்குள் கொண்டு சென்று நிறுத்துகிறார்.

எழில் கண்டுகொள்ளாமல் போனதால் கோபி தப்பிவிடுகிறார். ராதிகா மற்றும் மயூவை அழைத்துக்கொண்டு வேகமாக சென்றுவிடுகிறார்.

அமிர்த்தாவை பற்றி கூறி வருத்தப்படும் எழில்

அமிர்தாவை பற்றி பேசி செழியனிடம் வருத்தப்படுகிறார் எழில். அவர் எப்போதும் குடும்பத்தை பற்றி கூறியதே இல்லை, வீட்டுக்குள் அழைத்ததே இல்லை. அவரது அப்பா போன் செய்து வர சொன்னது பற்றியும், அவரது மாமனார் தான் அது என தான் அதிர்ச்சியாகி இருப்பதாக சொல்கிறார்.

கல்யாண ஆன பெண் என்றாலும் friend ஆக தானே பேசிட்டு இருக்க, அதில் என்ன தப்பு என செழியன் கேட்கிறார்.

லவ் பண்றியா?

கல்யாணம் ஆகிவிட்டது என தெரிந்து நீ இவ்வளவு வருத்தப்படும் நீ அந்த பெண்ணை லவ் பண்றியா என செழியன் கேட்கிறார். 'அப்படி எல்லாம் இல்லை. ஆனால் கல்யாணம் ஆகிவிட்டது என தெரிந்தும் எதையோ இழந்தது போல இருக்கிறது' என சொல்கிறார்.

இருந்தாலும் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது உண்மை தானா என உறுதிப்படுத்திக்கொள் என அட்வைஸ் செய்கிறார் செழியன். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி