ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: ராதிகாவுடன் பாக்யா வீட்டுக்கு வந்த கோபி: அடிக்க பாய்ந்த இராமமூர்த்தி.!

இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்டில் பாக்யா வீட்டில் நடக்கும் ஜெனியின் பங்கஷனுக்காக ராதிகாவை அழைத்து கொண்டு செல்கிறான் கோபி.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 7 Jan 2023, 10:06 am
பாக்யா வீட்டில் ஜெனிக்கான பங்க்ஷன் ஆரவாரமாக துவங்குகிறது. ஜெனியை ரெடி பண்ணி பாக்யா கீழே அழைத்து வருகிறாள். அவளுக்கு பாட்டி ஆசீர்வாதம் வழங்குகிறார். அந்த சமயத்தில் மரியம் தனது சொந்தங்களுடன் அங்கு வந்து வீட்டில் உள்ள அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறாள். அப்போது ஒருவர் செழியனின் அப்பா எங்கே. மாமானார் இந்த பங்ஷன்ல கலந்துகலையா என கேட்கிறார்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


உடனே அவன் வெளியூர் போய்விட்டதாகவும், திடீரென இந்த பங்க்ஷனுக்கு முடிவு பண்ணியதால் அவரால் வர முடியவில்லை என சொல்லி சமாளிக்கிறாள் மரியம். அப்போது இராமமூர்த்தியும் அங்கு ஜெனிக்கு ஆசீர்வாதம் வழங்குகிறார். இனியாவும் பின்னாடி கிளம்பி வருவதாக கூறுகிறார். அதன்பின்னர் சாப்பிட ஆரம்பிக்கலாமா என கேட்கும் போது, மரியம் பாதிரியார் வருவார். அவர் வந்து சின்ன சடங்கு மட்டும் பண்ணனும் என்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனைக்கேட்டு ஈஸ்வரி கடுப்பாகிறாள். அதன்பின்னர் ஏழில அனைவரையும் நிற்க வைத்து விதவிதமாக போட்டோ எடுக்கிறான். இந்தப்பக்கம் இனியா பங்க்ஷன் போவதற்காக ரெடியாகி கோபியிடம் சொல்ல தனியாவா போற என கேட்கிறான். பக்கத்துல தான இருக்கு நானே போயிட்டு வந்துருவேன் என்கிறாள். அவளை வெயிட் பண்ண சொல்லிவிட்டு உள்ளே ராதிகாவை போய் பார்க்கிறான். அவளிடம் பங்க்ஷன் போக கிளம்ப சொல்கிறான்.

Baakiyalakshmi Serial: அம்மாவுக்காக இனியா செய்த காரியம்: கண் கலங்கி நின்ற பாக்யா.!

ஆனால் அவள் நான் வரலை. நீங்க வேணா போயிட்டு வாங்க என சொல்ல, என்மேல உண்மையாவே அன்பு இருந்தா, நம்பிக்கை இருந்தா கிளம்பி வா என கட்டாயப்படுத்தி அழைத்து செல்கிறான். இந்தப்பக்கம் பாதிரியார் வந்து சென்றதும் நலங்கு வைக்க ஆரம்பிக்கின்றனர். அந்த சமயத்தில் கோபி ராதிகாவுடன் வர அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அவனை பார்த்ததும் ஜெனி சொந்தக்காரர்கள், செழியன் அப்பா வெளியூர் போனதா சொன்னீங்க. இப்போ ஏதோ ஒரு பொண்ணுக்கூட வந்து நிற்குறாரு என கேட்கின்றனர்.

Bigg Boss Dhanalakshmi: அசீமை பாராட்டி, விக்ரமனை குறை சொன்ன தனலட்சுமி: ரசிகர்கள் ஷாக்.!

அதற்கு கோபி இது என் மனைவி என சொல்ல இராமமூர்த்தி கோபத்தில் அடிக்க போகிறார். அவரை தடுக்கும் ஈஸ்வரி, ஜெனி சொந்தங்க எல்லாம் இருக்காங்க என கூறுகிறாள். அதன்பின்னர் ஜெனிக்கு நலங்கு வைக்க செல்லும் கோபி, ஒதுங்கி நிற்கும் ராதிகாவையும் அழைக்கிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி