ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: விபத்தில் சிக்கிய இனியாவின் ஸ்கூல் வாகனம்: அதிர்ச்சியில் கோபி, பாக்யா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 28 Nov 2022, 9:58 am
ராஜசேகர் சொன்ன கேட்டரிங் ஆர்டர் பற்றி பேசுவதற்காக ஜெனியை அழைத்து கொண்டு வருகிறாள். அங்கு வந்ததும் ராஜசேகரின் நண்பர் கேட்டரிங் சமையல் ஆர்டர் பற்றி கூறுகிறார். மேலும் இந்த கேட்டரிங் ஆர்டருக்காக ஏழு லட்சம் பணம் கட்ட வேண்டுமென்று சொல்கின்றனர். இத்னைக்கேட்டு பாக்யா தயங்க, ஜெனி அவள் கையை பிடித்து அமைதியாக இருக்க சொல்கிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அவர்களிடம் அதெல்லாம் பிரச்சனை இல்லை சார். பணம் கட்டிடலாம். நாங்க நல்லபடியா கேட்டரிங் ஆர்டரை முடிச்சுடுவோம் என கூறுகிறார். அவர்களிடம் பேசிவிட்டு வெளியவந்து ஜெனியும், பாக்யாவும் பேசி கொண்டிருக்கின்றனர். எப்படி ஏழு லட்சம் பணம் கட்டுவது என அவள் யோசிக்க, அதெல்லாம் போட்ட பணத்தை ஆறு மாசத்துல எடுத்துடலாம் ஆண்ட்டி. பார்த்துக்கலாம் என கூறுகிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அப்போது ராதிகா அவர்களை பார்க்கிறாள். நம்ம ஆபிஸ்ல இவுங்க என்ன பண்றாங்க என யோசிக்கிறாள். அவர்கள் போன் பிறகு தனது ஆபிஸ் மேனேஜர் பற்றி அவர்கள் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள் என விசாரிக்கிறாள். சமையல் ஆர்டர் வாங்க வந்திருப்பதாகவும், உங்களுக்கு புடிக்கலைன்னா சொல்லுங்க மாத்திடலாம் என சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லை என ராதிகா கூறிவிடுகிறாள்.

அதன்பின்னர் காபி ஷாப் ஒன்றில் கோபியை சந்தித்து பேசுகிறாள் ராதிகா. வீட்டில் நடந்த தவறுகளுக்காக அவன் மன்னிப்பு கேட்க, நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்குறதுக்காக தான் கல்யாணம் பண்ணோம். ஆனா இப்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை என கூறுகிறாள். கோபியும் சீக்கிரமே எல்லாத்தையும் சரி பண்றேன் என்கிறாள். அதன்பின்னர் பாக்யா தனது ஆபிசுக்கு வந்ததையும், சமையல் ஆர்டர் எடுக்க வந்தது பற்றியும் சொல்கிறாள்.

Bharathi Kannamma: கண்ணம்மாவை நிரந்தரமாய் பிரிய போகும் ஹேமா: வெண்பாவின் சதித்திட்டம்..!

அதற்கு கோபி அதெல்லாம் வேணாம்ன்னு உன் ஆபிஸ்ல சொல்லிடு. அவளால பண்ண முடியாது எனக்கூற, திறமை இருந்தா அவுங்க ஜெயிக்கட்டும் என ராதிகா சொல்கிறாள். அப்போது கோபிக்கு போன் வருகிறது. இனியா பிக்னிக் சென்ற வண்டி விபத்தில் சிக்கியதாகவும், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஸ்டுடென்ட் அனைவரும் ஸ்கூலுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இதனைக்கேட்டு ஷாக்காகும் கோபி, உடனே கிளம்புகிறான்.

இந்தப்பக்கம் வீட்டுக்கு வரும் பாக்யா ஆர்டர் கிடைத்த விஷயத்தையும், ஏழு லட்சம் பணம் கட்ட வேண்டிய விஷயத்தையும் கூறுகிறாள். எழில் லோன் போட்டுக்கலாம் என கூறுகிறான். அப்போது நிகிதாவின் அம்மா போன் போட்டு இனியா பிக்னிக் போன வேன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என சொல்ல பாக்கியா அதிர்ச்சடைகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Bharathi Kannamma: ஹேமாவை கொலை செய்ய முடிவெடுத்த வெண்பா: அதிரடி திருப்பம்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி