ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: இனியாவை அடிக்க பாய்ந்த ராதிகா: பாக்யாவுக்கு எதிராக நடக்கும் சதி வேலை.!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் தன்னை அடிக்க வரும் ராதிகாவை கடுமையாக எச்சரிக்கிறாள் இனியா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 15 Dec 2022, 10:06 am
பாக்யாவிற்கு பேங்கில் பணம் கிடைக்காததால் ராஜசேகர் தனது சொந்த பைனான்ஸ் மூலம் பணம் கொடுக்கிறார். இதனால் சந்தோஷத்துடன் வீட்டுக்கு வரும் பாக்யா, இன்னைக்கு உங்கக் மொகத்துல முழிச்சேன் அத்தை. அதான் நல்லதா நடக்குது என கூறுகிறாள். அவள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பதை பார்த்து வீட்டில் இருப்பவர்கள் என்னாச்சு என கேட்கின்றனர்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


அதன்பின்னர் பாக்யா தனக்கு பணம் கிடைத்த விஷயத்தை பற்றி கூறுகிறாள். உடனே ஈஸ்வரி இவ்வளவு பணத்தை அவர் ஏன் உனக்கு கொடுக்கணும். வட்டி அதிகமா என கேட்கும் போது, ஆமா அத்தை என்கிறாள். கேட்டரிங் ஆர்டருக்கு பணம் கட்டுவதற்கு கடைசி நாள் என்பதால் எழிலை அழைத்து கொண்டு உடனே கிளம்புகிறாள். கிளம்பும் முன் ஈஸ்வரியிடம் ஆசிர்வாதம் வாங்குகிறாள் பாக்யா.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
.
நீ பண்றது எல்லாம் நல்லதா? கெட்டதா? தெரியலை. ஆனா உனக்கு எப்பவும் நல்லது நடக்கணும் என சொல்லி அனுப்பி வைக்கிறாள். ஆபிஸ் வந்ததும் அவளை கேட்டரிங் இருக்கும் இடத்தில் காத்திருக்க சொல்கின்றனர். அங்கே உட்கார்ந்து இருக்கும் போது பல கனவுகளுடன், இந்த இடத்துக்கு நான்தான் இனிமே ஓனர் என சந்தோஷத்துடன் எழிலிடம் பேசி கொண்டிருக்கிறாள். அப்போது ஆபிசர் வரவும் அவரிடம் பணமிருக்கும் டிடியை கொடுக்கிறாள்.

அவர்களை கவனித்த ராதிகா மேனஜரிடம் சென்று அவங்க அவ்வளவு நல்ல கேட்டரிங் கிடையாது, நான் விசாரித்து பார்த்த வரைக்கும் நல்லபடியா சொல்லல. இவங்க வேண்டாம் என சொல்கிறாள். டிடி வாங்கிவிட்டதாக யோசித்துவிட்டு, உங்களுக்கு வேணாம்ன்னா விட்டுடலாம் என கூறிவிடுகிறார். அதற்குள் பாக்யா டிடியை கொடுத்துவிட்டு எழிலுடன் கிளம்பிவிடுகிறாள்.

Bharathi Kannamma: தேடி வந்த பாரதி தலையில் இடியை இறக்கிய கண்ணம்மா: சபதம் எடுத்த வெண்பா.!

அடுத்ததாக வீட்டுக்கு வரும் ராதிகா போன் நோண்டிக் கொண்டிருக்கும் மயூரா மற்றும் இனியாவை படிங்க என சொல்ல இனியா எதுவும் சொல்லாமல் இருக்கிறார். ராதிகா சொல்வது எதையும் இனியா கண்டுக்காமல் இருக்க இனியா போனை வாங்கி தூக்கி போடுகிறாள். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ராதிகா இனியாவை அடிக்க கை ஓங்குகிறாள். இனியாஅவள் கையைப் பிடித்து தள்ளி விடுகிறார். ஏன் டாடி கூட இதுவரைக்கும் என்ன அடிச்சது கிடையாது, நீங்க அடிக்க வர்றீங்க.

இதை அவர்கிட்ட சொன்னா என்ன ஆகும்னு தெரியுமா பார்த்து நடந்துக்கோங்க என மிரட்டிவிட்டுபேசிவிட்டு உள்ளே செல்கிறார். இதனிடையில் பாக்யா லோன் வாங்கிய பணத்தில் ஆனா செலவையெல்லாம் பார்க்கும் போது, அட்வான் ஐந்து லட்சம் கொடுத்ததாக போக கூடுதலாக செலவு ஆனதை கணக்கு பார்க்கிறாள். அதிகமாக செலவு ஆனதை பார்த்து வருத்தப்படுகிறாள் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Bharathi Kannamma: இரவோடு இரவாக கண்ணம்மா எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பாரதி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி