ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: ராதிகாவிடம் கையெழுத்து வாங்கிய போலீஸ்.. ஷாக் கொடுத்த கோபி.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 22 Jun 2022, 8:56 am
கோபி மற்றும் ராதிகா இருவரையும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக எழுதிக் கொடுத்து கையெழுத்து போட்டு விட்டு செல்லுமாறு கூறுகிறார் போலீஸ். கோபி கையெழுத்து போடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என கூறுகிறான். ஆனால் ராதிகா தயக்கத்துடன் இருக்க அவருடைய அண்ணனும் அம்மாவும் அவரை வெளியே அழைத்துச் செல்கின்றனர்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அவர்களிடம் அவர் டீச்சர் ஹஸ்பண்ட். என்னால கையெழுத்து எல்லாம் போட முடியாது என கூற, மயூ இப்போ உன்னோட இருக்கணும்னா நீ கையெழுத்து போட்டு தான் ஆகணும் என அவர்களிடம் கூறுகின்றனர். பிறகு வேறு வழியில்லாமல் ராதிகா கையெழுத்து போடுகிறாள். ராஜேஷிடம் போலீஸ் இனிமே எதுவா இருந்தாலும், கோர்ட்ல பார்த்துகோங்க என கூறுகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த பக்கம் பாக்கியா மயூராவிடம் பேசி அவரை சமாதானம் செய்கிறாள். உன்னை அம்மா அவ்வளவு சீக்கிரம் உங்க அப்பாகிட்ட அனுப்பி விட மாட்டாங்க, கண்டிப்பா நீ அம்மா கூட தான் இருப்ப பயப்படாத என கூறுகிறாள். மயூவுக்கு பால் காய்ச்சி கொடுத்து அவரைத் தூங்க வைக்கிறாள். இந்தப்பக்கம் ராதிகாவை அவரது அண்ணனும் அம்மாவும் வீட்டுக்கு போகச் சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.

ராதிகா வீட்டுக்கு வந்ததும் அங்கு பாக்யாவை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். பிரச்சனை எதுவும் இல்லல, நீங்க ஏன் மயூவை தனியா விட்டுட்டு போனீங்க? எனக்கு போன் பண்ணி இருந்தா நான் வந்து பார்த்துக்கிட்டு இருப்பேன்ல, நான் ஒரு ஆள் இருக்கிறது உங்களுக்கு மறந்து போச்சா.? நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிடும் நீங்க ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க என பாக்கியா கூறுகிறாள்.

Bharathi Kannamma: மயக்கமான ஹேமா.. கண்ணம்மாவை கண்டமேனிக்கு திட்டிய பாரதி.!

ராதிகா அவள் பேசுவதை எல்லாம் கேட்டு குற்றவுணர்ச்சி அடைகிறாள். இந்தப்பக்கம் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் கோபியை தனியாக அழைத்து பேசுகின்றனர். அவன் எனக்கு பாக்யாவை சுத்தமா பிடிக்கலை. ராதிகாவும், அவளும் குளோஸ் பிரெண்டா ஆவாங்கன்னு எனக்கு தெரியாது என கூறுகிறான். அப்போது ராதிகா அண்ணன், போலீசில் எழுதிக் கொடுத்தது எல்லாம் இருக்கட்டும் நீங்க என்ன முடிவில் இருக்கீங்க என கேட்க கோபி யோசிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி