ஆப்நகரம்

டைவர்ஸ் கொடுத்த பாக்யா.. வீட்டுக்கு வந்து சாமியாடிய கோபி: அதிர்ச்சியில் ராதிகா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 9 Aug 2022, 9:38 am
கோபி பாக்கியா கோர்ட்டுக்கு போன விஷயம் குறித்து எல்லோரும் பேசிக் கொண்டிருக்க இந்த வீட்ல இருக்க போறது யாரு? அப்பாவா? அம்மாவா? என கேட்டு இனியா அழுக, அப்படி எல்லாம் எதுவும் நடக்காது என தாத்தா ஆறுதல் கூறுகிறார். இந்தப்பக்கம் பாக்யாவை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறான் எழில். பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளுமாறு கூறுகிறான்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இந்தப்பக்கம் வீட்டுக்கு வந்த கோபியிடம் என்னாச்சு என எல்லாரும் கேட்க, எல்லாம் முடிஞ்சு போச்சு கோர்ட்ல அவ்வளவு தைரியமா தெளிவா விவாகரத்து கொடுக்க ஒத்துக்கிட்டேன் சொல்ற. ஜட்ஜ் எங்களுக்கு விவாகரத்தும் கொடுத்துட்டாங்க. இனி எனக்கும் பாக்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவள் எனக்கு பொண்டாட்டி கிடையாது என கூறுகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைய, அவளுக்கு உடம்பு பூரா அவ்வளவு திமிரு. இப்படி ஒருநாள் எப்போ வரும்ன்னு காத்திட்டு இருந்துருக்கா என கூறுகிறான். அதற்கு அவன் அப்பா, இதெல்லாம் நீ பத்த வைச்ச நெருப்பு. இப்போ நம்ம குடும்பத்தையே எரிக்கிது என்கிறார். உடனே ஈஸ்வரி என்ன வேணா இருக்கட்டும். ஒரு குடும்ப பொம்பள இப்படி பண்ணலாமா என திட்டுகிறாள்.

அப்போது செழியன் பாக்யாவுக்கு போன் பண்ணி பார்க்கிறேன் என கூற கோபி அவனை தடுக்கிறான். இனிமே அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. என்னை மீறி தனிப்பட்ட முறைல யாராவது அவக்கூட உறவு வைச்சுக்கிட்டா அவ்வளவு தான் என சொல்லிவிட்டு மேலே சென்றுவிடுகிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். இந்தப்பக்கம் பாக்யா டைவர்ஸ் கொடுத்ததை நம்ப முடியாமல் ராதிகா உட்கார்த்திருக்கிறாள்.

Bharathi Kannamma: உச்சக்கட்ட கோபத்தில் சௌந்தர்யா: மரண பயத்தில் வெண்பா.!

அப்போது அவள் அண்ணன் வக்கீலுக்கு போன் பண்ணி கேளு என சொல்ல, வக்கீலும் பாக்யா ரொம்ப தெளிவா பேசி டைவர்ஸ் வாங்கிக்கிட்டாங்க என கூறுகிறான். அந்த பாக்யா இவ்வளவு நாளா இந்த விஷயத்துக்காக தான் காத்திட்டு இருந்த மாதிரி இருக்கு. இனிமே ராதிகா தான் முடிவு எடுக்கணும் என அவள் அம்மாவும், அண்ணனும் கூறுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி