ஆப்நகரம்

கோபி கல்யாணத்தை நிறுத்த இராமமூர்த்தி செய்ய போகும் காரியம்: பரபரப்பான திருப்பங்களுடன்.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 5 Oct 2022, 9:36 am
கோபி பாக்யாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகும் ராதிகா ரூமிற்குள் வருகிறாள். அதன்பின்னர் அவன் வந்ததும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தீங்க என கோபப்பட நான் சிரிச்சு பேசுனேனா? இருந்து என் கல்யாணத்தை பார்த்துட்டு போகனும் தான் சொன்னேன் என கூறுகிறாள். பேச்சு வாக்கில் அவளை பாக்யா எனக்கூற கோபத்தில் கொந்தளிக்கிறாள் ராதிகா.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அவளை கோபி சமாதானம் செய்ய நம்ம கல்யாணம் நடக்குமா என ராதிகா வருத்தத்துடன் கேட்கிறாள். கண்டிப்பா நடக்கும். நீ எதைப்பற்றியும் கவலைப்படாத என சமாதானம் செய்கிறான். இதனிடையில் இராமமூர்த்தி ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து ஈஸ்வரியும், ஜெனியும் என்னாச்சு என கேட்க, அவன் எதுவுமில்லை எனக்கூறி அவர்களை சமாளிக்கிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் இரவில் தூங்க முடியாமல் தவிக்க அவனிடம் என்னாச்சு என ஈஸ்வரி விசாரிக்கிறாள். மனசு சரியில்லை என சொல்லி, கோபி கல்யாணம் நடக்காது. நீங்க கவலைப்படாதீங்க என அவனுக்கு ஆறுதல் சொல்லுகிறாள். இராமமூர்த்தி மனதிற்குள்ளே, நான் உயிரோட இருக்குற வரைக்கும் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன். நாளைக்கு விடியட்டும். இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்துறேன் என சொல்கிறான்.

Baakiyalakshmi Serial: கோபி மேல் ராதிகாவுக்கு வந்த சந்தேகம்: இனிதான் ஆட்டம் ஆரம்பம்.!

இந்தப்பக்கம் கோபி ரூமிற்கு காபி கொடுக்க வரும் செல்வி, நீங்க பண்ற எதுவுமே சரியில்லை என சொல்லிவிட்டு போகிறாள். கோபி கடுப்புடன் என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்றா என புலம்புகிறான். அதன்பின்னர் ராதிகா ரூமிற்கு வரும் செல்வி பாட்டு பாடி ராதிகாவை குத்தி காண்பிக்கிறாள். அதன்பின்னர் ராதிகாவும், பாக்யாவும் எதிரெதிர் சந்திக்கும் போது, என்னை நிம்மதியாவே இருக்க விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா டீச்சர்.

Bharathi Kannamma: கண்டமேனிக்கு திட்டி தீர்த்த பாரதி: வெண்பா கொடுத்த அதிர்ச்சி.!

கோபி சொல்லும் போது கூட நம்பல. இப்போதான் உங்களை பத்தி முழுசா தெரியுது என கூறுகிறாள். அதற்கு பாக்யா யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கிற பழக்கமும் பறிக்கிற பழக்கமும் எனக்கு இல்லை. நான் யாருடைய வாழ்க்கையும் பறிக்கல. சட்டப்படி தான கல்யாணம் பண்ண போறீங்க. அப்பறம் என்ன குற்றவுணர்ச்சி, பயம் என பதிலடி கொடுக்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி