ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: கோபி முன் எரிமலையாய் வெடித்த பாக்யா: ஆடிப்போன ராதிகா.!

பாக்கியலட்சுமி நாடகத்தில் இன்று நடைபெற்ற சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

Samayam Tamil 30 Sep 2022, 11:41 am
பாக்யாவை பார்த்ததால் மண்டபத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். ராதிகா அப்செட்டில் இருக்கிறாள். அவளை சமாதானம் செய்யும் கோபி, அவள் அண்ணனிடம் உடனடியாக பாக்யாவை அனுப்புமாறு கூறுகிறான். அவனும் தான் பேசிவிட்டு வருவதாக கூறுகிறான். அப்போது ராதிகா, மாலையும் கழுத்துமா என்னை தனியா மேடையில நிற்க வைச்சுட்டு போயிடாதீங்க என்கிறாள்.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


அதற்கு கோபி என்ன இப்படி பேசுற. இப்பவே உன் கழுத்துல தாலி கட்டுறேன் என்கிறான். அதற்கு அவள் அம்மா இந்த பாக்யா இந்நேரம் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிருப்பா. உங்க வீட்டு ஆளுங்க ஒவ்வொருத்தரா வருவாங்க. உங்க அம்மா பேசுற பேச்சை எல்லாம் கேட்கவே முடியாது என சொல்கிறாள். அதன்பின்னர் ராதிகாவை சமாதானம் செய்து மேடைக்கு அழைத்து வருகிறான்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்பக்கம் மாடியில் பாக்யா சாப்பாடு பரிமாறி கொண்டிருக்க செல்வி வந்து அவளை இந்த கல்யாணம் எப்படியோ போகுது. நம்ம கிளம்பலாம் என்கிறாள். இதனிடையில் ராதிகாவின் அண்ணன் மேனேஜரிடம் வந்து பேச, எதையும் ஓனர்கிட்ட பேசிதான் முடிவு பண்ண முடியும். அவர் வந்து முடிவு பண்ணுவாரு என கூறுகிறான். கோபி, பாக்யாவை பார்த்து திட்டம் போட்டு என் நிம்மதியா கெடுக்க சமைக்க வந்துருக்கா என முணுமுணுக்கிறான்.

அப்போது இராமமூர்த்தியும் மண்டபத்துக்கு வர்ற கோபி அதிர்ச்சியடைகிறான். அவனை பார்த்து வெக்கமா இல்லை. இப்படி மாலையும், கழுத்துமா நிற்க என சண்டை போட கோபி அவரை வெளிய போயா என பிடித்து தள்ளுகிறான். அதற்குள் பாக்யா வந்து மாமானாரை பிடிக்கிறாள். அவரை பற்றி ராதிகாவின் அம்மா பேச, பாக்யா கோபத்தில் கொந்தளிக்கிறாள். என் மாமாவை பற்றி பேச யாருக்கும் உரிமையில்லை என சத்தம் போடுகிறாள்.

Bharathi Kannamma: லஷ்மியை மகளாக ஏற்றுக்கொண்ட பாரதி: கோபத்தில் கொந்தளித்த வெண்பா.!

நடப்பதை எல்லாம் பார்த்து ராதிகா அதிர்ச்சியில் மேடையிலே நிற்கிறாள். கோபியின் அப்பா, உன் பிள்ளைங்க உன்னை இந்த கோலத்தில் பார்த்தால் நல்லா இருக்குமா என கேட்க இவளுக்கும் எனக்கும் எந்த ஒட்டும் வரவும் இல்ல என கோபி சொல்கிறான். அதற்கு மூர்த்தி, நீ விவாகரத்து பண்ணுது பாக்கியாவை தான் உன் பிள்ளைகளை இல்ல. இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என மாலையைப் பிடித்து இழுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி