ஆப்நகரம்

Baakiyalakshmi Serial: ராதிகாவை ஓட விட்ட செல்வி: பாக்யாவின் புதிய அவதாரம்.!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்டில் பாக்யா பியூட்டி பார்லர் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறாள் ராதிகா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 11 Jan 2023, 10:51 am
பாக்யா வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது அவள் தலைமுடி நரைத்திருப்பதாக செல்வி சொல்ல வருத்தப்படுகிறாள். அதன்பின்னர் அவள் கருப்பு மை பூச ஜெனி அவளை பார்லர் அழைத்துக்கொண்டு செல்வதாக கூறுகிறாள். பாக்யா அதெல்லாம் வேண்டாமென சொல்லியும் பார்லர் போக அப்பாயின்மென்ட் போடுறேன் என சொல்கிறாள்.
Samayam Tamil Baakiyalakshmi Serial
Baakiyalakshmi Serial


அதன்பின்னர் ஜெனி பாக்யாவை பியூட்டி பார்லர் கூப்பிட அவள் வர மறுக்கிறாள். பிறகு செல்வியும் வந்து வா அக்கா போயிட்டு வரலாம் என கூப்பிடுகிறாள். ஈஸ்வரியிடம் ஆபிஸ் போவதாக பொய் சொல்லிவிட்டு மூன்று பேரும் பாரலர் செல்கின்றனர். இந்தப்பக்கம் ராதிகாவும் அதே பார்லர் சென்று பேசியல் செய்து கொண்டிருக்கிறாள். அவள் என்று தெரியாமல் பக்கத்திலே பாக்யா உட்காருகிறாள். அவளுக்கு ஹேர் கலரிங் செய்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாக்யா வந்திருப்பது தெரியாமல் தன்னுடைய கல்யாண விஷயம் வருத்தமாக பேசுகிறார் ராதிகா. சில சமயம் சந்தோஷமா இருக்கு சில சமயம் ஏண்டா கல்யாணம் பண்ணும்னு இருக்கு. எதுக்கு இந்த வாழ்க்கை என்று தோனுது என புலம்புகிறாள். அடுத்ததாக பாக்யாவுக்கு ஹேர் கலரிங் செய்த பிறகு ராதிகாவை ஹேர் வாஷ் செய்ய அழைத்துச் செல்ல பாக்யாவும் ஹேர் வாஷ் செய்ய அழைத்துச் செல்லப்படுகிறாள். அப்போது செல்வி, ஜெனி ராதிகாவை பார்க்க அவளும் இருவரையும் பார்த்து ஷாக்காகிறாள்.

பாக்யாவை பார்த்து வீட்டைத் தவிர எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டு மேடம் பியூட்டி பார்லர் எல்லாம் வருவாங்களா என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் ராதிகா. பாக்யாவும் அவளை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அதன்பின்னர் பாக்யாவுக்கு ஹேர் வாஷ் செய்து முடித்த பிறகு பேசியல் பண்ணவா என கேட்க, பாக்யா அதெல்லாம் வேண்டாம் என்கிறாள்.

Baakiyalakshmi Serial: கோபத்தில் கண்டமேனிக்கு கத்திய கோபி: ராதிகா கொடுத்த அதிர்ச்சி.!

உடனே செல்வி, அக்காவுக்கு எதுக்கு பேசியல். அக்கா இயற்கையாகவே அழகுதான். அதெல்லாம் இயற்கையில் அழகு இல்லாதவங்க பண்றது என சைட் கேப்பில் ராதிகாவை குத்தி காட்டுகிறாள். இதனால் அவளும் கடுப்ப்பாகிறாள். அதன்பின்னர் போதும் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறாள் ராதிகா. பாக்யாவும் எல்லாம் முடித்து வீட்டுக்கு சென்ற பிறகு உள்ளே செல்வதற்கு முன்பாக ஈஸ்வரியை பற்றி யோசித்து பயப்படுகிறாள். அத்ததை கேட்டா என்ன சொல்றது என யோசிக்கிறாள்.

Bharathi Kannamma: கண்ணம்மா பற்றி தீயாய் பரவிய வதந்தி: கோபத்தில் கொந்தளித்த பாரதி.!

ஜெனியும், செல்வியும் அவளை சமாதானம் செய்து அதெல்லாம் எதுவும் தெரியாது என சொல்லி உள்ளே அழைத்து செல்கின்றனர். அவளை பார்த்ததும் என்னாச்சு பாக்யா ஒரு மாதிரி இருக்க எனக்கேட்ட அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை என சமாளிக்கிறாள். ஆனாலும் அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதாக சந்தேகப்படுகிறாள் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி