ஆப்நகரம்

Baakiyalakshmi: மகள் வாழ்க்கைக்காக காலில் விழும் பாக்யா.. இறுதியாக principal எடுத்த முடிவு

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று மகள் படிப்புக்காக தலைமை ஆசிரியரின் காலிலேயே விழுந்துவிட்டார் பாக்யா.

Samayam Tamil 10 Apr 2021, 6:03 pm
இனியாவின் வாழ்க்கை வீணாக போய்விடுமோ என்று பயத்தில் பாக்கியலட்சுமி எழிலிடம் பேசுகிறார். அவர் கிச்சனில் அமர்ந்து அழுது கொண்டிருந்த நிலையில் அவருக்கு எழில் மற்றும் வேலைக்காரி இருவரும் ஆறுதல் கூறுகின்றனர்.
Samayam Tamil baakiyalakshmi serial written update baakiya pleads the principal for iniyas studies
Baakiyalakshmi: மகள் வாழ்க்கைக்காக காலில் விழும் பாக்யா.. இறுதியாக principal எடுத்த முடிவு


மறுபடியும் பேசி பார்ப்போம்..

மறுபடியும் பள்ளிக்கு சென்று பேசி பார்ப்போம் என கூறி எழிலை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவேலைக்காரியிடம் கூறிவிட்டு செல்கின்றனர்.

இதெல்லாம் வேண்டாம் என எழில் ஆரம்பத்திலேயே தடுக்கிறார். ஆனால் பாக்யா 'நான் பேசி புரியவைக்கிறேன்' என சொல்லி உறுதியாக செல்கிறார்.

பள்ளியில் இருந்து வெளியில போங்க

அவர்கள் பள்ளிக்கு சென்று அங்கிருக்கும் ஆசிரியையிடம் பேசும்போது 'உங்களை யார் உள்ளே விட்டது என்று தான் முதல் கேள்வியை கேட்கிறார்'. தலைமை ஆசிரியரை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என பாக்யா கேட்கிறார். ஆனால் அவர் விடுவதில்லை.

அந்த நேரம் பார்த்து principal வெளியில் வருகிறார். அவரிடம் பேச முயன்றாலும் அவர் பேச முன்வருவதில்லை. வெளியில் அனுப்புங்க இவங்களை என கூறிவிட்டு செல்கிறார்.

காலில் விழும் பாக்யா

அதன் பின் principal வீடு எனக்கு தெரியும் என கூறி, எழிலை அங்கு கூட்டி செல்கிறார் பாக்யா. அங்கு போனால் வீடி பூட்டி இருக்கிறது. சற்று நேரத்திற்கு பின் தான் principal வீட்டுக்கு வருகிறார்.

அவர் முதலில் பேச மறுத்து வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொள்கிறார். ஆனால் பாக்யா திடீரென அவரது காலில் விழுந்து கெஞ்சுகிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத அவர் எழச்சொல்லி கேட்கிறார். எழிலும் எழுமா என பலமுறை கூறுகிறார். அவர் கேட்பதாக இல்லை.

இறுதி சான்ஸ் கொடுக்கும் தலைமை ஆசிரியர்

காலில் விழுந்த பிறகு இவர்களை உள்ளே அழைத்து உட்காரவைத்து பேசுகிறார் அவர். அங்கு பாக்யா கண்ணீருடன் பேசுகிறார். என்னை போல என் பெண்ணும் ஆகிவிடக்கூடாது என்பதால் தான் நான் கெஞ்சுகிறேன். நான் படிக்கவில்லை, என் பெண்ணும் அப்படி ஆகிவிடக்கூடாது' என கண்ணீருடன் கேட்கிறார்.

அதற்கு பிருகு மனமிறங்கிய தலைமை ஆசிரியர், 'நான் மேனேஜ்மென்ட் இடம் பேசி பார்க்கிறேன். இது தான் கடைசி சான்ஸ். இது பெண்ணுக்காக இல்லை, உங்களுக்காக மட்டும் தான்" என கூறுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி