ஆப்நகரம்

பெற்றோர் பெரிய பதவியில் இருந்தால் இவனுக்கு தண்டனை இல்லையா? பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று இனியா மீண்டும் பள்ளிக்கு செல்ல துவங்கி இருக்கிறார்.

Samayam Tamil 15 Apr 2021, 4:50 pm
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த இரண்டு வாரங்களாக இனியா வீட்டுக்கு வரமால் போனது பற்றிய பிரச்சனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. பள்ளியில் டிசி கொடுத்து, அதன் பிறகு பாக்கியலட்சுமி சென்று தலைமை ஆசிரியர் காலில் விழுந்து மீண்டும் இனியாவை பள்ளியில் சேர்ந்துகொள்ள வைக்கிறார்.
Samayam Tamil baakiyalakshmi serial written update iniya is back in school
பெற்றோர் பெரிய பதவியில் இருந்தால் இவனுக்கு தண்டனை இல்லையா? பாக்கியலட்சுமி சீரியலில் இன்று



பள்ளிக்கு கிளம்பும் இனியா

இவ்வளவு பெரிய கலவரத்திற்கு பிறகு இனியா மீண்டும் இன்று முதல் பள்ளிக்கு செல்ல ரெடியாகி வருகிறார். அவருக்கு வீட்டில் இருக்கும் அனைவரும் அட்வைஸ் செய்கின்றனர்.

இனிமேலாவது படிப்பில் மட்டும் கவனம் செலுத்து, வேறு எதிலும் உன் கவனம் போகக்கூடாது என சொல்கிறார். அவரது பாட்டி அழைத்து சென்று சாமி கும்பிட வைக்கிறார். இனி அது போன்ற தவறுகளை செய்ய வேண்டும் என தோன்றினால் உன் அம்மா principal காலில் விழுந்ததை நினைத்துக்கொள் என சொல்கிறார் பாட்டி.

எப்போதும் அமைதியா இருக்க மாட்டேன்

கோபி இனியாவை அழைத்து 'எவ்வளவோ நடந்துவிட்டது, நான் அமைதியாக இருந்தேன். ஆனால் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டேன். உன்னுடைய கவனம் படிப்பதில் மட்டும் தான் இருக்க வேண்டும். போர்டு எக்ஸாமில் நல்ல மார்க் எடுத்தால் நீ என கேட்டாலும் நான் வாங்கி கொடுக்கிறே'ன் என சொல்கிறார்.

தாத்தாவும் இனியாவுக்கு அட்வைஸ் செய்கிறார். நீ பள்ளிக்கு சென்றால் எல்லோரும் இதை பற்றி தான் கேட்பார்கள். நீ அதை கண்டுகொள்வதே. அமைதியாகவே இரு என அவர் கூறுகிறார்.

வருத்தப்படும் பாக்யாவின் அம்மா

ஏற்கனவே பாக்யா தனது மசாலா பிசினெஸ் இப்படி ஆகிவிட்டதே என வருத்தத்தில் இருக்கிறார். கான்வென்டுக்கு கொடுக்க வேண்டிய மசாலாவை இன்னும் கொடுக்கவில்லையே என நியாபகப்படுத்துகிறார் ஜெனி. அதுதான் என்ன செய்வதென்று தெரியவில்லை என குழப்பத்தில் இருக்கிறார் பாக்யா.

அந்த நேரத்தில் பாக்யாவின் அம்மா வருகிறார். நீ போன மாதம் பணம் கொடுத்ததால், தம்பி மனைவி நன்றாக நடத்தினார், இனி நீ பணம் கொடுக்க மாட்டாய் என தெரிந்தால் அவ்வளவுதான் என கூறி பாக்யாவை குத்தி காட்டுகிறார் அவர்.

சந்தோஷிடம் பேசாத இனியா

பள்ளியில் இனியா மற்ற தோழிகளுடன் பேசி கொண்டு இருக்கிறார். இனியாவை எப்படி மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதை அவர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டனர். அம்மா தான் பேசி சேர்த்துவிட்டார் என சொல்கிறார். இனியாவுடன் படத்திற்கு சென்ற மற்றொரு பெண்ணை டிசி கொடுத்து அனுப்பிவிட்டு நிலையில், அவர் திரும்பி வரவே இல்லை என வருத்தத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் சந்தோஷ் அங்கு வருகிறார். 'அவன் பெற்றோர் பெரிய பதவியில் இருக்கிறார்கள் என்பதால், அவனுக்கு மட்டும் டிசி கொடுக்கவே இல்லை' என சொல்கின்றனர் மற்ற தோழிகள். சந்தோஷ் வந்து இனியாவிடம் பேசுகிறார், ஆனால் இனியா கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவுபெறுகிறது.

அடுத்த செய்தி