ஆப்நகரம்

பாக்கியலட்சுமி சீரியல்: பழனிச்சாமி வீட்டுக்கு வந்த பாக்யா: நேரில் பார்த்து ஆடிப்போன கோபி.!

பாக்கியலட்சுமிக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் நல்ல நண்பர்களாக லோபிகாவும், பழனிச்சாமியும் கிடைக்கின்றனர். குடும்ப பிரச்சனைகள் பற்றியெல்லாம் அவர்களிடம் தான் மனம் விட்டு பேசுகிறாள். அந்த சமயத்தில் பழனிச்சாமி ஒரு இரண்டு நாட்களாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸுக்கு வராதது பற்றி யோசிக்கிறாள். உடனே லோபிகாவுடன் சேர்ந்து அவனை பார்க்க வீட்டுக்கே போகிறாள். பழனிச்சாமி வீட்டுக்கு வந்து நலம் விசாரிக்கிறாள் பாக்யா. அவள் பழனிச்சாமி வீட்டுக்கு வந்த விஷயம் தெரிந்து கோபி ஷாக்காகிறான்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 10 May 2023, 10:09 am
கோபியை பிரிந்த பின்பு பாக்கியலட்சுமி கல்யாணம், கேட்டரிங் ஆர்டர் என மாஸ் காட்டி வருவது எ அவனுக்கு எரிச்சலை தருகிறது. போதாக்குறைக்கு பாக்யா பழனிச்சாமியுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து தவறாக நினைத்து கொள்கிறான். அவளிடம் இதுப்பற்றி கேட்க, அது என்னோட இஷ்டம். இதெல்லாம் பற்றி கேட்க நீங்க யாரு என பதிலடி கொடுத்துவிடுகிறாள் பாக்யா.
Samayam Tamil பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல்


இந்த சமயத்தில் பழனிச்சாமி இரண்டு நாட்களாக ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸுக்கு வராததது பற்றி யோசிக்கிறாள் பாக்யா. லோபிகாவும் அதுப்பற்றி பேச, ஒருவேளை அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சார் சொல்லிருந்தாருல. ஏதாவது ரொம்ப முடியாம போயிருக்கோமோ என யோசிக்கின்றனர். உடனே லோபிகாவும் நேர்லயே போய் பார்த்துட்டு வரலாமா என கேட்கிறாள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சரியென பழனிச்சாமிக்கு போன் பண்ணி டியுஷனுக்கு ஏன் வரலை என லோபிகா கேட்கிறாள். அவனிடம் அட்ரசும் கேட்டு நாங்க நேர்ல வந்து பார்க்கலாமா என கேட்கிறாள். தாராளமா கிளம்பி வாங்க என்று பழனிச்சாமி சொல்கிறான். உடனடியாக பாக்யாவும், லோபிகாவும் பழனிச்சாமி வீட்டுக்கு கிளம்பி செல்கின்றனர். வீடு பார்க்கவே கடல் மாதிரி இருப்பதை பார்த்து லோபிகா ஆச்சரியமாக சொல்கிறாள்.

அதன்பின்னர் அம்மாவை பார்த்து பேசுகின்றனர். அவரும் பழனிச்சாமியை பற்றி கவலையாக பேசுகிறார். முன்னாடி தான் அக்கா, தங்கச்சிங்களுக்கு கல்யாணம் பண்ணனும்னு இவன் கல்யாணம் பண்ணாம இருந்துட்டான். இப்போ எல்லா கடைமையும் முடிச்சிட்டும் கல்யாணம் பண்ண சொன்னா ஏதாவது காரணம் சொல்லிட்டே இருக்கான் என்கிறார். பாக்யாவும் அவருக்கு ஆறுதல் சொல்கிறாள்.

Pandian Stores: மூர்த்தியால் மனம் மாறிய கண்ணன்: முல்லை, ஐஸ்வர்யா இடையில் வெடித்த சண்டை.!

அதன்பின்னர் பாக்யாவையும், லோபிகாவையும் சாப்பிட வைக்கிறான் பழனிச்சாமி. அம்மா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் படி பாக்யா சொல்கிறாள். அப்போ அக்கா, தங்கச்சி எல்லாரும் வந்தா உங்களை பார்த்துக்க இத்தனை பேர் இருக்காங்கன்னு அம்மா நிம்மதியடைவாங்க என சொல்கிறாள் பாக்யா. அதனை தொடர்ந்து இரண்டு பேரும் கிளம்பி காருக்காக காத்திருத்து கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து லோபிகா ஏதோ பொருளை மறந்து வைச்சுட்டேன் என சொல்லி உள்ளே போகிறாள்.

Pandian Stores: அண்ணனிடம் உண்மையை மறைத்த கதிர்: கோபத்தில் கொந்தளித்த மூர்த்தி.!

அவள் போனதும் பாக்யாவும், பழனிச்சாமியும் வெளியில் நின்று பேசி கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் காரில் அந்த பக்கமாக வரும் கோபி அவளை பார்த்து ஷாக்காகிறான். எல்லாரும் கோபி தப்பு பண்றான்னு சொல்றாங்க. ஆனால் பாக்யா பண்ற எந்த தப்பும் வெளிய தெரிய மாட்டேங்குது என புலம்புகிறான். இதை வைச்சு கோபி என்னென்ன பஞ்சாயத்தை கூட்ட காத்திருக்கானோ..!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி