ஆப்நகரம்

Barathi Kannamma அஞ்சலிக்கு தப்பான மாத்திரை கொடுக்கும் வெண்பா, பழி பாரதி மீது

என் குடும்பத்தினர் யாரும் என்னை புரிந்துகொள்ளவே இல்லை என புலம்புகிறார் பாரதி. அதன் பின் வெண்பா அஞ்சலிக்கு தவறாக மாத்திரைகளை கொடுக்கிறார், அதன் பழி பாரதி மீது விழும்படி திட்டம் போடுகிறார்.

Samayam Tamil 21 Aug 2021, 1:32 am
பாரதி கண்ணம்மாவில் இன்று வெண்பா அஞ்சலியை பழிவாங்க சில மாத்திரைகளை கொடுக்கிறார். பழி அவர் மீது வந்துவிட கூடாது என்பதற்காகவும் அவருக்கு இரு திட்டத்தை கூறுகிறார் பாரதி.
Samayam Tamil barathi kannamma august 20 episode venba prescribes wrong medicines to anjali
Barathi Kannamma அஞ்சலிக்கு தப்பான மாத்திரை கொடுக்கும் வெண்பா, பழி பாரதி மீது



புலம்பும் பாரதி, தூண்டிவிடும் வெண்பா

பாரதி அவரை வீட்டில் யாருமே புரிந்துகொள்ளவில்லை என சொல்லி புலம்புகிறார். லட்சுமி விஷயம் பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் இத்தனை நாள் ஏமாற்றி இருக்கிறார்கள் என சொல்கிறார்.

வெண்பா அவர் பங்கிற்கு பாரதியை ஏற்றி விடுகிறார். இதற்கெல்லாம் கண்ணம்மா தான்காரணம். ஹேமாவுடன் நெருக்கமாக பழகி அதை வைத்து உனக்கு பிரச்சனை கொடுப்பது முதல் பிளான் என்றால், அவள் மகள் லக்ஷ்மியை உன்னுடன் பழகவிடுவது இரண்டாவது பிளான். இதில் எது ஒர்கவுட் ஆனலும் அதை வைத்து உன்னை காலி செய்யலாம் என நினைத்து இருப்பாள் என கூறுகிறார்.

அஞ்சலிக்கு தப்பான மாத்திரை

அதன் பின் வெண்பா அஞ்சலிக்கு போன் செய்கிறார். உன்னுடைய உயிருக்கே ஆபத்து என தெரிந்த பிறகு என்னால் அதை யாரிடமும் சொல்லாமல் இருக்க முடியவில்லை என பொய்யாக நடிக்கிறார். இந்த உண்மையை யாரிடமும் சொல்லிவிடாதே என அஞ்சலி கெஞ்சுகிறார்.

அதன் பிறகு தான் சில மாத்திரைகள் கொடுப்பதாகவும், அதை சாப்பிடு உனக்கு சரியாகவும் வாய்ப்பு இருக்கிறது என சொல்கிறார் வெண்பா.

பாரதியை மாட்டிவிட வேலைக்காரி கொடுக்கும் ஐடியா

வெண்பா அஞ்சலியிடம் பேசி முடித்தபிறகு வேலைக்காரி என்ன விஷயம் என கேட்கிறார். அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் மெதுவாக கொள்ளவும் மாத்திரையை எழுதி தரப்போவதாக சொல்கிறார் வெண்பா.

உங்கள் பெயரில் prescription எழுதி கொடுக்காதீர்கள். பாரதி சாரின் ஒரு prescription பேப்பர் திருடி வந்து அதில் எழுதி கொடுங்கள், அப்போது தான் எது நடந்தாலும் நீங்கள் தப்பிக்கொள்ளலாம் என வேலைக்காரி ஐடியா கொடுக்கிறார். அதே போல செய்வதாக கூறுகிறார் வெண்பா. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி