இது பாரதி கையெழுத்து இல்லையே
அஞ்சலிக்கு கண்ணம்மா கஷாயம் வைத்து கொடுக்கிறார், அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இந்த கஷாயம குடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி கண்ணம்மா குடிக்க வைக்கிறார். அதன் பின் ஏன் மாத்திரை எதுவும் குடிக்கவில்லை என கேட்கிறார் கண்ணம்மா.
வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிடுவதை ஏற்கனவே நிறுத்தி இருந்த அஞ்சலி, எதாவது சொல்லி சமாளிக்கலாம் என நினைத்து, மாத்திரை காலி ஆகி விட்டது என கூறுகிறார். நீ prescription கொடு நான் வாங்கி வருகிறேன் என கேட்டு வாங்குகிறார் கண்ணம்மா.
அதை பார்த்துவிட்டு அது பாரதியின் கையெழுத்து இல்லையே என கேட்கிறார், அப்போது தான் அது வெண்பா எதோ தில்லுமுல்லு செய்திருப்பது அஞ்சலிக்கு தெரிகிறது. வேறு ஜூனியர் டாக்டர் எழுதி கொடுத்தது என கூறி சமாளிக்கிறார் அஞ்சலி.
நீ நாட்டு மருந்து சாப்பிடு
அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் உடலில் அதிக பாதிப்பு வருகிறது, அதனால் தான் அதை சாப்பிடாமல் இருக்கிறேன் என சொல்கிறார் அஞ்சலி. அப்படி என்றால் எனக்கு இருந்த பிரச்சனை தான் உனக்கும் இருக்கிறது.
நீ இனி நாட்டு மருந்து சாப்பிடு, அருகில் ஒரு பாட்டி இருக்கிறார், அவரிடம் நான் உன்னை கூட்டி செல்கிறேன் என கூறுகிறார் கண்ணம்மா.
மகிழ்ச்சியில் கண்ணம்மா, குழப்பத்தில் பாரதி
அதன் பின் வீட்டில் இரண்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடி கொண்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறார். அவர்கள் எப்போதும் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும் என அஞ்சலி கூறுகிறார், அதை உங்க வீட்டில் இருக்கும் டாக்டரிடம் சென்று சொல், என்ன சொல்கிறார் என பார்க்கலாம் என சொல்கிறார். அதன் பின் ஹேமா, லட்சுமி இருவரையும் கதை சொல்லி தூங்கவைக்கிறார் கண்ணம்மா.
மறுபுறம் பாரதி அவர் வீட்டில் குழப்பத்துடன் அமர்ந்திருக்கிறார். ஹேமாவை விட்டு பிரிந்து இருப்பது பற்றி புலம்புகிறார். அதன் பின் நாளை விடிந்ததும் முதல் வேலையாக சென்று ஹேமாவை கூட்டி வந்துவிட வேண்டும் என முடிவெடுக்கிறார்.
இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.