ஆப்நகரம்

வெண்பாவை கால் செய்து கலாய்க்கும் கண்ணம்மா! பாரதி கண்ணம்மாவில் இன்று

பாரதி கண்ணம்மாவில் இன்று வெண்பாவுக்கு கால் செய்து நடு ராத்திரியில் கலாய்க்கிறார்.

Samayam Tamil 25 Oct 2021, 11:23 pm
பாரதி கண்ணம்மாவில் கடந்த வாரம் கண்ணம்மா வீட்டுக்கு ஹேமா மற்றும் அஞ்சலி இருவரும் செல்கின்றனர். அதை பாரதிக்கு தெரியாமலும் பார்த்துக்கொள்கின்றனர்.
Samayam Tamil barathi kannamma october 25 episode kannamma troll venba by calling him in night
வெண்பாவை கால் செய்து கலாய்க்கும் கண்ணம்மா! பாரதி கண்ணம்மாவில் இன்று



வெண்பாவை வெச்சி செய்யும் கண்ணம்மா

கண்ணம்மா தனது இரண்டு மகள்களும் ஒன்றாக தன்னுடன் இருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர்களுடன் விளையாடுகிறார். கேமரா மேனை வரவைத்து ஒன்றாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

வெண்பா தன்னை ஏமாற்றி இருப்பது பற்றி நினைக்கும் கண்ணம்மா நள்ளிரவில் அவருக்கு கால் செய்து கலாய்க்கிறார். தன் மகளை கொடுத்துவிடு என முதலில் கெஞ்சும் கண்ணம்மா அதன் பின் என் குழந்தை என்னிடம் தான் இருக்கிறது என சொல்லி கலாய்க்கிறார் அவர். அதை கேட்டு வெண்பா டென்சன் ஆகிறார்.

ஹேமாவை தேடி வரும் பாரதி

பாரதி ஹேமாவை பிரிந்து இருக்க முடியாமல் காலையில் முதல் வேலையாக காரை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார். ஹேமாவை பார்ப்பது தான் தற்போது முக்கியம் அவர் நினைக்கிறார்.

முதலில் ஹேமாவை பார்ப்பது தான் முக்கியம் என நினைக்கும் அவர் ஹாஸ்பிடலில் இருந்து அவசர அழைப்பு வந்தாலும் போக முடியாது என மறுக்கிறார்.

நாட்டு மருத்துவரிடம் உண்மையை கூறும் அஞ்சலி

அதன் பின் கண்ணம்மா தன் வீட்டில் அருகில் இருக்கும் நாட்டு வைத்தியம் பார்க்கும் பாட்டியை அழைத்து வருகிறார். அவர் தனியாக அஞ்சலியிடம் பேசுகிறார். அப்போது என்ன பிரச்சனை சொல், நாடி சரியில்லை என்ன ஆனது சொல் என கேட்கிறார்.

அதனால் அஞ்சலை கண்ணீருடன் தனது உயிருக்கு பிரசவத்தின்போது ஆபத்து இருக்கிறது என சொல்கிறார். அதை கேட்டு அவர் அதிர்ச்சி ஆகிறார். உன்னை போல ஒரு பெண்ணை பார்த்ததில்லை என சொல்லிவிட்டு நாட்டு மருந்து கொடுத்துவிட்டுபோகிறார்.

அடுத்த செய்தி