ஆப்நகரம்

பணம் கொடுக்கும் பாரதி, கடும் டென்ஷன் ஆகும் கண்ணம்மா! பாரதி கண்ணம்மாவில் இன்று

பாரதி கண்ணம்மாவின் வீட்டில் ஹேமாவை விடுகிறார். அதன் பின் அவாரிடம் பணத்தை கொடுக்கிறார் பாரதி . கோபமாகும் கண்ணம்மா அதை வாங்க மறுக்கிறார்.

Samayam Tamil 24 Jul 2021, 3:52 pm
பாரதி கண்ணம்மாவில் நேற்றைய எபிசோடில் பாரதி கண்ணம்மாவின் வீட்டுக்கு சென்று அழைக்க, அவர் வர முடியாது என கூறுகிறார். வேண்டுமானால் ஹேமாவை அழைத்து வந்து எண்ணிடம் விட்டுவிடுங்கள் பார்த்துகொல்கிறேன் என கூறுகிறார்.
Samayam Tamil barathi kannamma serial today barathi brings hema to kannammas home
பணம் கொடுக்கும் பாரதி, கடும் டென்ஷன் ஆகும் கண்ணம்மா! பாரதி கண்ணம்மாவில் இன்று



கொந்தளிக்கும் வெண்பா

வெண்பா வீட்டில் கடும் கோபத்துடன் இருக்கிறார். அவரது வேலைக்காரி உடன் அவர் பாரதி பற்றி பேசுகிறார். இப்படி நடக்கும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என சொல்லும் அவர், பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒன்றாக வந்ததை பார்த்து அதிர்ச்சி ஆனதாக கூறுகிறார்.

பாரதி அமெரிக்கா சென்றுவிட்டால் அதற்கு பிறகு நான் 15 கழித்து அங்கு போய் பாரதி உடன் இருக்கலாம் என நினைத்திருந்தேன், அது தற்போது வீணாக போட்டிவிட்டது என சொல்கிறார் வெண்பா.

பாரதி எடுக்கும் முடிவு

பிறகு ஹேமா தூக்கத்தில் கூட சமையல் அம்மா சமையலம்மா என கூறிக் கொண்டு இருப்பதை பார்த்து பாரதி ஒரு முக்கிய முடிவு எடுக்கிறார். ஹேமாவை அவள் விருப்பப்பட்டது போல கண்ணம்மா உடன் சில நாட்கள் இருக்க வைக்க முடிவெடுக்கிறார்.

ஹேமா தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவளை தூக்கி கொண்டு கிளம்புகிறார். அவர் முடிவை கேட்டு வீட்டில் இருக்கும் மற்றவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பாரதியா இப்படி மாறி விட்டான் என அதிகம் மகிழ்ச்சி அடைகிறார்கள். போகும் வழியில் பாரதி மிகவும் எமோஷனலாக பேசிக் கொண்டு போகிறார்.

கண்ணம்மா வீட்டில் ஹேமா

கண்ணம்மா வீட்டுக்கு சென்று சேர்ந்த பிறகு தான் ஹேமா கண் விழிக்கிறார். காரிலிருந்து இறங்கி மேலே சென்று கண்ணம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள். பாரதி ஹேமாவை கொண்டு வந்து விடுவார் என கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அவர்களை அழைத்து உட்கார வைத்து பேசுகிறார். நான் ஆசைப்பட்டதற்காக என்னை உங்களிடம் விட்டு விட்டு போக அப்பா வந்திருக்கிறார் என்று கூறுகிறார் ஹேமா. டாக்டர் சொன்னார்கள், அம்மாவும் அதையேதான் சொன்னார், அதனால் தான் அழைத்து வந்து விடுகிறேன் என பாரதி கூறுகிறார்.

பணம் கொடுக்கும் பாரதி, கோபமாகும் கண்ணம்மா

பாரதி அதற்கு பிறகு தன்னுடைய பர்சை எடுத்து அதில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை கண்ணம்மாவிடம் நீட்டுகிறார். எதற்கு என கேட்க, ஹேமா இங்கே தங்கும்போது சாப்பாடு உள்ளிட்ட பல செலவுகள் இருக்கும், அவள் ஏதாவது கேட்டால் வாங்கித் தரவேண்டும் அல்லவா அதனால்தான் பணம் தருகிறேன் எனக் கூறுகிறார்.

கண்ணம்மா அதை வாங்க மறுக்கிறார். 'உங்க பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், நான் அன்பை விலைக்கு விற்பதில்லை. எனக்கும் இந்த வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளை பார்த்துக் கொள்வது போல் ஹேமாவையும் பார்த்துக்கொள்கிறேன் எனக் கூறி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி