ஆப்நகரம்

வெண்பா ஓவரா நடிக்கிறியா.. பெரிய ஆப்பு வைத்த அஞ்சலி! பாரதி கண்ணம்மாவில் இன்று

பாரதி கண்ணம்மாவில் இன்று வெண்பாவுக்கு திருமணம் ஆகவில்லை என்கிற உண்மையை அஞ்சலி கண்ணம்மா முன்னிலையில் போட்டு உடைக்கிறார்.

Samayam Tamil 4 Sep 2021, 11:32 pm
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதுவரை மூடி மறைத்து வைக்கப்பட்டு இருந்த உண்மைகள் ஒவ்வொன்றாக பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு தெரியவருகிறது. அதனால் பிரச்சனைகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil barathi kannamma serial today episode anjali reveals venba is not married
வெண்பா ஓவரா நடிக்கிறியா.. பெரிய ஆப்பு வைத்த அஞ்சலி! பாரதி கண்ணம்மாவில் இன்று



கடுப்பேற்றும் பாரதி.. வெளியேறும் கண்ணம்மா

வளைகாப்பு விழா தொடங்கும் நிலையில் எல்லோரும் அஞ்சலி அருகில் நிற்கின்றனர். அப்போது கண்ணம்மாவும் அருகில் நிற்க அவரை கடுப்பேற்ற பாரதி வெண்பாவுடன் நெருக்கமாக இருப்பது போல காட்டுகிறார்.

வீட்டின் கதவை பூட்டிவிட்டாயா, கேஸ் ஆப் பண்ணிட்டியா என வெண்பாவிடம் அவர் கேட்கிறார். அவரும் அதற்கு தகுந்தாற்போல் பேசி நடிக்கிறார். இதை கேட்டு டென்ஷன் ஆகும் கண்ணம்மா அங்கிருந்து வெளியில் செல்கிறார்.

ஹேமா என் குழந்தையா? சந்தேகப்படும் கண்ணம்மா

வெளியில் வந்து கண்ணம்மா அங்கு ஹேமா விளையாடி கொண்டிருப்பதை பார்க்கிறார். லட்சுமி போல ஹேமா மீதும் தனக்கு அதிகம் பாசம் இருப்பது ஏன் என யோசிக்கிறார். அவள் உண்மையில் வெண்பா மகளாக இருந்தால் நான் நினைப்பது ரொம்ப தப்பாகிவிடுமே எனவும் யோசிக்கிறார்.

அப்போது அங்கு சௌந்தர்யா வர அவரிடம் கேட்க செல்கிறார் கண்ணம்மா. ஆனால் அவரோ அங்கிருத்து தன்னை யாரோ கூப்பிடுகிறார்கள என சொல்லி தப்பி சென்றுவிடுகிறார்.

அதன் பின் கண்ணம்மா அவரது அப்பாவிடம் சொல்லி வளைகாப்பிற்கான செலவுகளை வாங்கி வர செய்கிறார்.

ஓவராக நடிக்கும் வெண்பா.. ஆப்பு வைக்கும் அஞ்சலி

அதன் பின் வளைகாப்பு தொடங்குகிறது. எல்லோரும் வந்து அஞ்சலியை வாழ்த்தி செல்கின்றனர். அதன் பின் பாரதியை வரும்படி அழைக்கின்றனர். அப்போது வெண்பாவும் உடன் செல்கின்றார். அப்போது தான் தன்னை பாரதியின் மனைவி என எல்லோரும் நினைப்பார்கள் என இப்படி செய்கிறார்.

வெண்பா ஓவராக நடிப்பதை பார்த்த அஞ்சலி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுகிறார். வெண்பாவுக்கு திருமணம் ஆகவில்லை, அவர் எப்படி வாழ்த்தலாம் என கேட்கிறார். அதை கேட்டு கண்ணம்மா கடும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி