ஆப்நகரம்

Barathi Kannamma: ரௌடிகளிடம் இருந்து தப்பி ஓடும் ஹேமா, கண்ணம்மாவை ஜாமினில் எடுத்த சௌந்தர்யா

பாரதி கண்ணம்மாவில் இன்று மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவை ஜாமிழில் வெளியில் கூட்டி வருகிறார். மறுபுறம் ஹேமா ரௌடிகள் இடம் இருந்து தப்பி ஓடுகிறார்.

Samayam Tamil 23 Jun 2021, 12:46 pm
கண்ணம்மா தான் எனது குழந்தையை கடத்திவிட்டாள் என பாரதி போலீசில் புகார் அளித்து இருக்கிறார். ஆனால் அவர் மீது எந்த தவறும் இல்லை என மாமியார் சௌந்தர்யா வந்து போலீசிடம் கூறுகிறார். இதனால் போலீஸே குழப்பமடைகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் கண்ணம்மாவை ஜாமினில் அழைத்து சென்றுவிடுவேன் என கூறிவிட்டு செல்கிறார்.
Samayam Tamil barathi kannamma serial today hema escapes from kidnapers soundarya brings kannamma out on bail
Barathi Kannamma: ரௌடிகளிடம் இருந்து தப்பி ஓடும் ஹேமா, கண்ணம்மாவை ஜாமினில் எடுத்த சௌந்தர்யா



அஞ்சலியின் டெஸ்ட் ரிப்போர்ட்

அகில் மற்றும் அஞ்சலி இருவரும் சில தினங்கள் முன்பு ஹாஸ்பிடல் சென்று வந்தனர். அன்று எடுத்த ஸ்கேன் முடிவுகளை இரண்டு நாட்களில் மெயிலில் அனுப்புவதாக டாக்டர் சொல்கிறார்.

அது பற்றி இன்று டாக்டருக்கு போன் செய்து கேட்கிறார் அஞ்சலி. ஆனால் டாக்டர் அவரை நேரில் வர சொல்கிறார். அஞ்சலிக்கு நெஞ்சுவலி அடிக்கடி வருவதாக சொன்ன நிலையில், அது ஏதாவது பெரிய பிரச்னையாக இருக்குமோ என அவர் ஷாக் ஆகிறார்.

கண்ணம்மாவிடம் பேசும் லட்சுமி

கண்ணம்மா கைதாகி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதால், லக்ஷ்மியை பள்ளியில் இருந்து அகில் தான் அழைத்து வருகிறார். வீட்டிற்கு வந்த பிறகு அம்மா பற்றி அதிகம் விசாரிக்கிறார் லட்சுமி. அவர் வேலையாக வெளியில் சென்று இருக்கிறார் என சொன்னாலும் அவர் கேட்பதில்லை. அம்மாவிடம் போனில் பேச வேண்டும் என அவர் சொல்கிறார்.

அகில் அவரது போனில் கண்ணம்மாவுக்கு போன் செய்து கொடுக்கிறார். கண்ணம்மாவும் தான் ஒரு வேலையாக வெளியில் வந்து இருக்கிறேன், அதனால் வர தாமதம் ஆகும் என கூறிவிடுகிறார்.

ரௌடிகளிடம் இருந்து தப்பும் ஹேமா

வெண்பா ஏற்பாடு செய்திருக்கும் ரௌடிகள் ஹேமாவை கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவர்களிடம் இருந்து ஹேமா தப்பிக்க முயற்சி செய்கிறார். பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டுத் அந்த இடத்தில் இருக்கும் ஒரு ஒட்டை வழியாக தப்பி செல்ல முயற்சிக்கிறார்.

ஆனால் ஒரு ரௌடி அதை பார்த்துவிட்டு மற்றவர்களையும் அழைக்கிறான். ஹேமா அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார். பல இடங்களில் மறைந்து மறைந்து அவர் அவர்களது கண்களில் இருந்து தப்புகிறார்.

கண்ணம்மாவை ஜாமினில் எடுக்கும் சௌந்தர்யா

ஸ்டேஷனில் இருக்கும் கண்ணம்மாவை ஜாமினில் எடுப்பதற்காக மாமியார் சௌந்தர்யா வக்கீல் உடன் செல்கிறார். சட்டப்படி கண்ணம்மாவுக்கு ஜாமீன் கொடுத்து வெளியில் கூட்டி செல்கிறார்.

வெளியில் வந்த பிறகு கண்ணம்மா பாரதி பற்றி எல்லாம் கோபப்பட்டு பேசவில்லை. அவர் நான் செய்யாத தவறுக்கு தண்டனை கொடுப்பது இது முதல் முறை அல்ல என கூறுகிறார். சௌந்தர்யா தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தாலும் அவர் வருவதில்லை. ஆட்டோவில் தனது வீட்டுக்கு செல்வதற்காக கூறுகிறார்.

ஆனால் சௌந்தர்யா கண்ணம்மாவை காரில் ஏற்றிக்கொண்டு கிளம்புகிறார். அவர்கள் ஹேமாவை சிந்திப்பார்களா என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.

அடுத்த செய்தி