ஆப்நகரம்

பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா! ஆனால் ஒரு ட்விஸ்ட்.. பாரதி கண்ணம்மாவில் இன்று

பாரதியை கண்ணம்மா கத்தியால் குத்திவிடுவது போல கனவு காண்கிறார் சௌந்தர்யா. இந்த முறையும் கனவு தானா என ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள்.

Samayam Tamil 17 Nov 2021, 8:21 pm
பாரதி கண்ணம்மா விவாகரத்து வழக்கில் பாரதி சொல்வதாக சொன்ன பெரிய உண்மை என்ன? கண்ணம்மாவை அசிங்கப்படுத்தி விடுவானோ என சௌந்தர்யா வருத்தத்தில் இருக்கிறார்.
Samayam Tamil barathi kannamma serial today soundarya imagines kannamma stabbing barathi in court
பாரதியை கத்தியால் குத்திய கண்ணம்மா! ஆனால் ஒரு ட்விஸ்ட்.. பாரதி கண்ணம்மாவில் இன்று



வெண்பாவின் சதி

வெண்பா அனுப்பிவைத்த மாயாண்டி வேலைக்காரி உடன் சேர்ந்து கண்ணம்மாவுக்கு எதிராக சதி திட்டங்கள் போடுகிறார். பாரதி கண்ணம்மா டைவர்ஸ் கேஸ் விசாரணைக்கு வருவது பற்றி சிறையில் இருக்கும் வெண்பாவுக்கு போன் போட்டு கூறுகின்றனர்.

டைவர்ஸ் கிடைக்கவில்லை என்றால் உடனே அஞ்சலியை கடத்தி கொன்றுவிடுங்கள் என வெண்பா கூறுகிறார். வேலைக்காரியை கோர்ட்டுக்கு அனுப்பிவிட்டு அங்கு என்ன நடக்கிறது என பார்த்து சொல்லும்படி கூறுகிறார் மாயாண்டி.

கடத்தப்படும் அஞ்சலி

அஞ்சலி கோவிலுக்கு சென்று கண்ணம்மாவுக்காக உருக்கமாக வேண்டி கொள்கிறார். அங்கிருந்து அவர் திரும்பும் வழியில் மாயாண்டி ஏற்பாடு செய்திருக்கும் ரௌடிகள் அவரை கடத்துகின்றனர். ஒரு இடத்தில் அவரை கட்டிபோடுகின்றனர்.

மாயாண்டியை அஞ்சலிக்கு நன்றாக தெரியும் என்பதால் அவர் முன் செல்லாமல் தூரத்தில் இருந்தே பார்க்கிறார். தன்னுடைய பெயரை யாரும் சொல்லிவிட வேண்டாம் என்றும் சொல்கிறார். அவர் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக அவரது முகத்தை மூடி வைக்க சொல்லிவிட்டு அதன் பின் அருகில் செல்கிறார்.

பாரதியை கத்தியால் குத்தும் கண்ணம்மா

பாரதி தான் சொல்வதாக சொன்ன காரணத்தை கோர்ட்டில் சொல்கிறார். கண்ணம்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது. அவருக்கு பிறந்த குழந்தை தான் தற்போது அவரிடம் வளர்ந்துகொண்டிருக்கிறது என கூறுகிறார்.

இதை கேட்டு கோபமான கண்ணம்மா அருகில் இருக்கும் போலீஸ் துப்பாக்கியில் இருந்த கத்தியை எடுத்து பாரதியை குத்தி விடுகிறார். பயப்படாதீங்க இதுவும் கனவு தான். (எப்பவாவது கனவு என்றால் பரவால.. எப்பவுமே என்றால் எப்படி? ரசிகர்கள் கடுப்பாவது நிச்சயம்).

அப்படி கனவு காணும் சௌந்தர்யா அதிர்ச்சியுடன் எழுகிறார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தெரிந்து அமைதி அடைகிறார்.

வக்கீல் மீது கோபப்படும் பாரதி

பாரதி கோர்ட்டுக்கு வெளியில் வக்கீலிடம் பேசுகிறார். இன்றே டைவர்ஸ் கிடைக்கும் என சொன்னீங்க ஆனால் தற்போது அது நடக்காது போல தெரிகிறதே என சொல்லி கேட்கிறார் பாரதி. நீங்க என்னிடம் சொன்னது பாதி தான், இப்படி செய்தால் எப்படி என சொல்லி கேட்கிறார் அவர்.

"மேலும் உடனே டைவர்ஸ் கிடைக்க ஒரு வழி இருக்கிறது. உங்க மனைவி கண்ணம்மாவுக்கு பல பேருடன் தொடர்பு இருக்கிறது என சொல்லுங்க" என வக்கீல் சொல்கிறார். அதை கேட்டு கோபமாகும் பாரதி அவரை திட்டிஅனுப்புகிறார் . இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி